செய்திகள் :

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

post image

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவன் சிஹோரா ரயில் நிலையத்தில் நிற்பது ரயில்வே போலீஸாருக்குத் தெரிய வந்தது. உடனே ரயில்வே போலீஸார் அவனைக் கைது செய்ய சென்றனர்.

ஆனால் அந்தத் திருடன் ரயில் தண்டவாளம் வழியாகத் தப்பித்து ஓடினான். அவனை ரயில்வே போலீஸார் தொடர்ந்து விரட்டி சென்றனர். அந்நேரம் ரயில் தண்டவாளம் அருகில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்திற்குள் திருடன் குதித்துவிட்டான்.

உடனே ரயில்வே போலீஸாரும் அவனை குளத்தில் தேடினர். ஆனால் அவனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. தண்ணீருக்குள் இருந்து எப்படியும் வெளியில் வந்துதானே ஆகவேண்டும் என்று கருதி ரயில்வே போலீஸார் குளத்தைச் சுற்றி நின்றனர்.

பிடிபட்ட திருடன்

ஆனால் மணிக்கணக்கில் திருடன் தண்ணீருக்குள் இருந்து வெளியில் வரவே இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் ரயில்வே போலீஸார் திருடனைக் கண்டுபிடிக்க நீச்சல் விரர்களை குளத்திற்குள் இறக்கினர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தண்ணீருக்குள் மறைந்து இருந்த திருடனைக் கண்டுபிடித்து கைது செய்தனர். 5 மணி நேரம் திருடன் தண்ணீருக்குள் மறைந்து இருந்தான். இது குறித்து அத்திருடனிடம் விசாரித்தபோது குளத்தில் இருந்த தாமரை தண்டின் மூலம் 5 மணி நேரமாக தண்ணீருக்குள் இருந்து கொண்டு சுவாசித்ததாக அத்திருடன் தெரிவித்தான்.

மேலும் அவன் ரயில்களில் ஏ.சி பெட்டியில் பயணம் செய்யும் பெண்களைக் குறி வைத்து திருடி வந்ததாகவும், இதுவரை 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருடி இருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தான்.

அவனது பெயர் ஹர்விந்தர் சிங் என்றும், சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் திருடி வந்துள்ளான்.

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் ஏறி பெண்களிடம் திருடிவிட்டு நடுவழியில் இறங்கிச்சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும்... மேலும் பார்க்க

குறுக்கு வழி பயணத்தால் விபரீதம்: கிணற்றுக்குள் பாய்ந்த கார்... குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்... மேலும் பார்க்க

நெருங்கும் ட்ரம்ப் காலக்கெடு; ஈரான் மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனிதச் சங்கிலி?

ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள... மேலும் பார்க்க

"GMTக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)"- நேரக்கணக்கீட்டு முறையை மாற்ற கோரும் மத்திய அமைச்சர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் இருக்கும் மகாகால் கோயில் மிகவும் பிரபலமான கோயில்.தர்மேந்திர பிரதான்சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சர்வதேச நேரக் கணக்கீட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து க... மேலும் பார்க்க

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த இரண்டு பே... மேலும் பார்க்க

"என் மகளின் கண்ணியமே எனக்கு முக்கியம்" - விவாகரத்து பெற்ற மகளை மேள தாளங்களுடன் அழைத்து வந்த தந்தை

உத்தரப்பிரதேசத்தில் கோர்ட்டால் விவாகரத்து வழங்கப்பட்ட மகளை ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஞானேந்திர சர்மா. ஓய்... மேலும் பார்க்க