செய்திகள் :

'எங்கள் பங்கு தண்ணீரில் கை வைத்தால், கையை வெட்டுவோம்' - இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்

post image

கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த நதியை நம்பிதான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது. இதனால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவு.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த வாரம் பேசியிருந்தார்.

பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்
பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்
இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்திற்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார், பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்...

"அண்டை நாட்டின் பிரதமர் ஒருவரின் கட்டுப்பாட்டில் ஒரு தண்ணீர் குழாய் இருக்கிறது. பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட ஓடவிட மாட்டேன் என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 40 முதல் 50 சதவிகிதம் பேர் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்.

யாரோ ஒரு நபர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு, 50 சதவீத வேலைவாய்ப்பு மற்றும் 25 சதவீத பொருளாதாரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்.

ஆனால், இங்கு நீதிக்கான ஒரு கேள்வியும் எழுகிறது. எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம்.

இதை நாங்கள் ஏதோ சும்மா அறிவிக்கவில்லை, மாறாக எங்கள் பங்கிற்கான தண்ணீரில் யாராவது கை வைத்தால், அந்தக் கையை வெட்டுவோம் என்பதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்தும் காட்டியிருக்கிறோம்.

சிந்து நதி நீர்
சிந்து நதி நீர்

இப்போது மேல்படுகைப் பகுதிக்கு எல்லாம் கீழ்படுகைப் பகுதிக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்த உரிமை இருக்கிறதா என்ன?

அதுவும் நமக்கு இடையே ஒரு ஒப்பந்தமே இருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கு எப்படித் தண்ணீரை நிறுத்த முடியும்? இந்த வழக்கைத் தான் நாங்கள் நாளை முன்வைக்கப் போகிறோம்.

சர்வதேச அளவில் நீதி என்றால் என்ன என்பது இனி தீர்மானிக்கப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கீழ்படுகைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குத் தண்ணீருக்கான உரிமை இருக்கிறதா இல்லையா என்பது இனி தீர்மானிக்கப்படும்."

`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏனென்றால்..!' - நிர்மல் குமார்

தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல... மேலும் பார்க்க

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை... மேலும் பார்க்க

``எடப்பாடியாரே, நீங்கள் எடுத்த அந்த தன்னிச்சையான முடிவு... விடைபெறுகிறேன்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க-விலிருந்து 6-வது எம்.எல்.ஏ-வாக கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க முன்​னாள் அமைச்​சருமான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் நேற்று ராஜினாமா செய்​தார். இதற்​கான கடிதத்தை சென்னை தலை​மைச் செயல​கத்​தி... மேலும் பார்க்க

ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சமிபத்தில்தான் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி-க்கள், துணை முதல்வர் ஏக்நாத்... மேலும் பார்க்க

இன்று கர்நாடகாவில் SIR: 11 பாயின்ட்டுகளில் தேர்தல் ஆணையத்திற்கு `செக்' வைக்கும் கர்நாடகா அமைச்சரவை!

இன்று (ஜூன் 30, 2026) முதல் கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குகிறது.இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கர்நாடகா அமைச்சரவை சில அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையத்த... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கிய மாணவர் - 1.66 கோடி கொள்முதல் தரவுகளை வெளியிட்டு அதிரடி

சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்த 12 ஆம் வகுப்பு மாணவர் சார்தக் சித்தாந்த், தற்போது மத்திய அரசின் கொள்முதல் தரவு... மேலும் பார்க்க