செய்திகள் :

எஸ்.ஐ தேர்வு: 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கை தானா? - திமுக அரசைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எஸ்.ஐ., தேர்வு குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் போது, `தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?' என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

"எங்கும் தமிழ்" என்பது வாயளவுக் கொள்கை தானா?

மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? `எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கை தானா? `எதற்கு தமிழ்?' என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா? மு.க ஸ்டாலின்.

தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ?

டி.என்.பி.சி குரூப் 2 கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே... இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, `வாங்கியதை' எல்லாம் `திருப்பி கொடுக்காமல்' இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அழகுபார்க்கும் அரசாகத் திகழும்

`3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்' என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள். இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள உங்களின் அதிமுக அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்' - அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `ஆட்சியர் நிதி ஒதுக்கியும், பள்ளியில் கழிவறை கட்டாம இருக்காங்க' - புலம்பும் பெற்றோர்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி தொடங்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளின் தொடக்கக் கல்வி தேவையைப் பூர்த்தி செய்யப்பட்டது. 200... மேலும் பார்க்க

மோடியின் இஸ்ரேல் உரை: `இந்தியாவின் கௌரவத்தைக் குறைப்பது போல் உள்ளது' - காங்கிரஸ் கடும் சாடல்

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் நாடாளுமன்றத்த... மேலும் பார்க்க

தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!

தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது.கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நட... மேலும் பார்க்க