செய்திகள் :

"ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார்" - அமிதாப்பச்சன்

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது.

குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்.

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர்.

ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

`அறிகுறியே இல்லை, பரிசோதனையில்தான் தெரிந்தது'- புற்றுநோயிலிருந்து மீண்டதை குறித்து நடிகை மஹிமாசெளதரி

Cgபாலிவுட் நடிகை மஹிமா செளதரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இளம் பெண்களின் மாநாட்டில் கலந்து கொண்டு... மேலும் பார்க்க

"என் உடல் நடுங்கியது; உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்" - தன் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த மௌனி ராய்

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய். குறிப்பாக ‘நாகினி' தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது... மேலும் பார்க்க

Deepika Padukone: "தாயான பிறகு இதெல்லாம் என்னிடம் மாறியிருக்கிறது!" - தீபிகா படுகோன்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி ‘கிங்’ படத்தில் தீபிகா படுகோன் தற்போது நடித்து வருகிறார்.தீபிகா படுகோன் மற்றொரு பக்கம் அட்லி - அல்லு அர்ஜூன் இயக்கும் படத்திலும் முக்கியமானதொ... மேலும் பார்க்க

'பயோகேஸ் உரம், மாடித்தோட்டம், ஆர்கானிக் முறை' - காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் ரகுல் பிரீத் சிங்

பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர். நடிகை ரேகா தனது வீட்டு வளாகத்தில் தோட்டம் வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ரகு... மேலும் பார்க்க

"விவாகரத்து பற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை" - வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்து தெரிவிக்க... மேலும் பார்க்க

``என் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறுவார்கள், ஆனால்'' - பாலிவுட் நடிகர் கோவிந்தா மனைவி

பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா... மேலும் பார்க்க