செய்திகள் :

"ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார்" - அமிதாப்பச்சன்

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது.

குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்.

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர்.

ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Dhurandhar: `அழகே அழகே...' - சாரா அர்ஜுன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara Tendulkar: `சுற்றுலா பிரசாரத்துக்கு ரூ.1140 கோடி' - ஆஸ்திரேலியா பிராண்ட் தூதராக சச்சின் மகள் மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி

நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திரு... மேலும் பார்க்க

``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிகர் சல்மான்

சவூதி அரேபியாவில் தற்போது ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் நேற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மா... மேலும் பார்க்க

Dharmendra: "இதயம் நொறுங்கிய நிலையில்..." - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்... மேலும் பார்க்க

Aamir Khan: ``அதை நினைத்து அப்போது வீட்டிற்கு வந்ததும் அழுவேன்!'' - மனம் திறந்த ஆமிர் கான்

ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடனான படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. கூடிய விரைவில் அதன் அத... மேலும் பார்க்க

LK7: "அவர் மும்பைக்கும் வரும்போது நரேஷன்" - லோகேஷ் கனகராஜ் உடனான படம் குறித்து ஆமிர் கான்

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவு... மேலும் பார்க்க