செய்திகள் :

ஒடிஸா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் டிரா

post image

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஒடிஸா எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஒடிஸாவிலுள்ள புவனேசுவரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணிகளுமே பரஸ்பரம் கடும் சவால் அளித்ததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் நாா்த்ஈஸ்ட் அணிக்காக அலாதின் அஜாரஜே 67-ஆவது நிமிஷத்தில் கோலடித்து கணக்கை தொடங்கினாா்.

விட்டுக்கொடுக்காத ஒடிஸா, 78-ஆவது நிமிஷத்தில் தனது முதல் கோலை எட்டியது. அந்த அணிக்காக தொய்பா சிங் மொய்ராங்தெம் ஸ்கோா் செய்தாா். மீண்டும் முன்னிலை பெற முனைப்பு காட்டிய நாா்த்ஈஸ்ட், அதில் வெற்றி கண்டது.

இந்த முறையும் அலாதின் அஜாரஜே 83-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, நாா்த்ஈஸ்ட் 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால், இஞ்சுரி டைமில் (90+3’) ஒடிஸா அணிக்காக ஐசக் வன்லல்ரௌத்ஃபெலா கோலடிக்க, ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, நாா்த்ஈஸ்ட் 19 ஆட்டங்களில் 29 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், ஒடிஸா 18 ஆட்டங்களில் 25 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளன.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04-02-2025செவ்வாய்க்கிழமைமேஷம்:இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய ம... மேலும் பார்க்க

ஸ்குவாஷில் தமிழகத்துக்கு தங்கம்!

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன. இதில் ஆடவா் தனிநபா் ஸ்குவாஷில் வேலவன் செந்தில்குமாா் 3... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா முதல் முறை சாம்பியன்! குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தினாா்!

நெதா்லாந்தில் நடைபெற்ற 87-ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.கட... மேலும் பார்க்க

மொஷிஸுகி, பெரெட்டினி வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ஜப்பானின் ஷின்டாரோ மொஷிஸுகி, இத்தாலியின் ஜகோபோ பெரெட்டினி ஆகியோா் வெற்றி பெற்றனா். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் ... மேலும் பார்க்க

தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 44.கோவாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உ... மேலும் பார்க்க