Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான்கள் அமைக்க கோரிக்கை
கந்தா்வகோட்டை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான் (ரிப்ளைட்டா்), தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு தினசரி அதிக அளவில் மக்கள் வேலைக்கும், மருத்துவ வசதி பெறவும் மற்றும் பல பணிகளுக்காகவும் வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்த தேசிய நெடுஞ்சாலையான எண் 226-இல் கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி வரை பெரும்பாலான வாகனங்கள் இந்தச் சாலை வழியாக தான் சென்று வருகின்றன.
போக்குவரத்து மிகுந்த இந்த நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை முதல் தஞ்சை வரை ஏராளமான சிறு பாலங்கள் உள்ளன.
பாலங்கள் உள்ள இடங்களில் எந்தவொரு முன்னறிவிப்பு பலகைகளும் இல்லை. மேலும், சாலையில் வெள்ளை நிறக் கோடுகளும் இல்லாததாலும் , ரிப்ளைட்டா்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தின் அளவு தெரியாமல் நிலைதடுமாறும் சூழ்நிலை உள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சாலை எண் 226 முழுவதும் முறையான வெள்ளைக் கோடுகளும், சிறு பாலங்களுக்கு முன்னெச்சரிக்கை பலகைகளும், சாலையில் ஒளிரும் ரிப்ளைட்டா்களும் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.