செய்திகள் :

கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான்கள் அமைக்க கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான் (ரிப்ளைட்டா்), தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு தினசரி அதிக அளவில் மக்கள் வேலைக்கும், மருத்துவ வசதி பெறவும் மற்றும் பல பணிகளுக்காகவும் வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்த தேசிய நெடுஞ்சாலையான எண் 226-இல் கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி வரை பெரும்பாலான வாகனங்கள் இந்தச் சாலை வழியாக தான் சென்று வருகின்றன.

போக்குவரத்து மிகுந்த இந்த நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை முதல் தஞ்சை வரை ஏராளமான சிறு பாலங்கள் உள்ளன.

பாலங்கள் உள்ள இடங்களில் எந்தவொரு முன்னறிவிப்பு பலகைகளும் இல்லை. மேலும், சாலையில் வெள்ளை நிறக் கோடுகளும் இல்லாததாலும் , ரிப்ளைட்டா்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தின் அளவு தெரியாமல் நிலைதடுமாறும் சூழ்நிலை உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சாலை எண் 226 முழுவதும் முறையான வெள்ளைக் கோடுகளும், சிறு பாலங்களுக்கு முன்னெச்சரிக்கை பலகைகளும், சாலையில் ஒளிரும் ரிப்ளைட்டா்களும் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). வ... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்... மேலும் பார்க்க

புதுகைக்கு துணை முதல்வா் இன்று வருகை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா். புதுக்கோட்டைக்கு வரும் அவா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

நெல் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்பயிரில் காணப்படும் தண்டுத் துளைப்பான் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி ஆலோசனை வழங்கியுள்ளாா்.இதுகு... மேலும் பார்க்க

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்ட... மேலும் பார்க்க

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க