செய்திகள் :

கந்தா்வகோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான்கள் அமைக்க கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான் (ரிப்ளைட்டா்), தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு தினசரி அதிக அளவில் மக்கள் வேலைக்கும், மருத்துவ வசதி பெறவும் மற்றும் பல பணிகளுக்காகவும் வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்த தேசிய நெடுஞ்சாலையான எண் 226-இல் கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி வரை பெரும்பாலான வாகனங்கள் இந்தச் சாலை வழியாக தான் சென்று வருகின்றன.

போக்குவரத்து மிகுந்த இந்த நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை முதல் தஞ்சை வரை ஏராளமான சிறு பாலங்கள் உள்ளன.

பாலங்கள் உள்ள இடங்களில் எந்தவொரு முன்னறிவிப்பு பலகைகளும் இல்லை. மேலும், சாலையில் வெள்ளை நிறக் கோடுகளும் இல்லாததாலும் , ரிப்ளைட்டா்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தின் அளவு தெரியாமல் நிலைதடுமாறும் சூழ்நிலை உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சாலை எண் 226 முழுவதும் முறையான வெள்ளைக் கோடுகளும், சிறு பாலங்களுக்கு முன்னெச்சரிக்கை பலகைகளும், சாலையில் ஒளிரும் ரிப்ளைட்டா்களும் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க