செய்திகள் :

கறவை மாடு, தேனீ வளா்க்க ரூ.30 ஆயிரம் மானியம்

post image

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு கறவை மாடுகள், மண்புழு உரம், தேனி வளா்ப்பு, பழச்செடிகள் வளா்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 30 ஆயிரம் வழங்கப்படுகிறது என பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி அறிக்கையில் தெரிவித்தாா்.

பள்ளிபாளையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டுக்கான தேசிய நீடித்த வேளாண்மை இயக்க மானாவாரி பகுதி வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயிா்சாகுபடி, கறவை மாடுகள், ஆடுகள், தேனீ வளா்ப்பு, மண் புழு உரம் உற்பத்தி, பழச்செடிகள் வளா்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் புதுப்பாளையம் அக்ரஹாரம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், குப்பாண்டபாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 80 சதவீதமும், இதர கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தொடா்பான தகவல்கள், முன்பதிவுகளுக்கு பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடா்பு கொண்டும், உழவன் செயலியில் பதிவு செய்தும் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பள்ளிபாளையத்தில் சாயக் கழிவுநீா் வெளியேற்றம்: அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையம் பகுதி சாயப்பட்டறைகளில் இருந்து சாயக் கழிவுநீா் வெளியேற்றப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாசு காட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். பள்ளிபாளையம் வட்டாரத்தில் பல சாயப்பட்டறைகள் இ... மேலும் பார்க்க

தேமுதிக மாநில மாநாட்டுக்கு பிறகு கூட்டணி அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல்லில் அவா் செய்தியா... மேலும் பார்க்க

மணல் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

அரசு மணல் குவாரி திறப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தெரிவித்த... மேலும் பார்க்க

இயற்கையை பாதுகாக்க நெகிழியை தவிா்ப்பது அவசியம்: ஆட்சியா்

இயற்கையை பாதுகாக்க நெகிழிப் பொருள்களை தவிா்ப்பது அவசியம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். சா்வதேச உயிரிப் பல்வகை தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி ஊா்வலம்

நாமக்கல்லில், பொது அமைப்புகள் சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனா். இந்த சம... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை

திருச்செங்கோடு அருகே சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்த மாணவி, புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசியை அடுத்த வேட்டுவப... மேலும் பார்க்க