செய்திகள் :

'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார் நாகேந்திரன்

post image

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற பிரசார பயணம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, " எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு முதலமைச்சர்களை கொடுத்த ஊர் என்பதால் தான் தேனியை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவ கல்லூரியும் கொடுத்திருக்கிறது அதிமுக.

தேனியில் எல்லா இடங்களிலும் மணல் திருட்டு, லஞ்சம், ஊழல் தான் தற்போது நடக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னமும் திறக்கவில்லை. இதைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே நோக்கம், இந்த ஒன்றைத் தவிர திமுகவிற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

நயினார் நாகேந்திரன்

காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள், கடந்த வாரத்தில் மட்டும் 4 பாலியல் வன்கொடுமைகள், 8 கொலைகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?. எல்லா கிராமங்களிலும் கஞ்சா போதை தான் இருக்கிறது.

திமுகவின் கூட்டம் கூடினால் அங்குள்ள டாஸ்மாக் கடையில் வருமானம் அதிகமாகும்.

'இந்த முறை திமுகவை விட 10 சதவீத ஓட்டுக்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பற்ற முடியாது'.

பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மக்கள்

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மட்டும் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் ஒன்றைரை லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளது.

தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ரயில் நிலையங்கள் புதுப்பிப்பக்கும் பணிகள் நடந்து வருகிறது" என்றார்.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க