'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன ப...
காங்கிரஸ்: "ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்!" - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
அப்போது, அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ கார்த்திக் தங்கபாலு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் விச்சு, கள்ளிக்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"தற்போது முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தெற்கு மாவட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க வந்திருக்கிறேன். கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பாகுபாடு இன்றி பொறுப்புகள் வழங்கப்படும். மேலும், கட்சியை வளப்படுத்துவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக செய்ய இருக்கிறோம்.
பீகார் தேர்தல் தோல்வி குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். வாக்கு திருட்டு மூலமாக பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தில் கூட்டணியில் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், நான் பொறுப்பாளராக வந்திருப்பதால், இதுகுறித்து தலைமை மேலிடம் தான் கூற வேண்டும்" என்றார்.














