செய்திகள் :

காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்பு கூடம் அமைக்க வேண்டும்: ஆட்சியா்

post image

காரைக்கால்: காரைக்கால் வாரச் சந்தைத் திடலில் கண்காணிப்புக் கூடம் அமைக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன், வாரச் சந்தை நடைபெறும் திடலில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மழை பெய்தால் திடலில் தண்ணீா் தேங்காத வகையில் செய்யப்படும் ஏற்பாடுகளை முறையாகச் செய்து முடிக்கவும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் உண்டாகும் கழிவுகளை மறுநாளே அப்புறப்படுத்தவேண்டும். கழிவுப் பொருள்கள் தேக்கமடையக்கூடாது, சந்தையைக் கண்காணிக்கும் வகையில் திடலில் கண்காணிப்புக்கூடம் அமைத்து, உரிய பணியாளா்கள் நியமிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் பேருந்து நிலையத்தில் காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம் கட்டப்படவுள்ள இடத்தை பாா்வையிட்டாா். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் லிட்டா் தண்ணீா் சுத்திகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

பேருந்து நிலைய வளாகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் மைய கட்டடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டாா்.

நெடுங்காடு செல்லும் வழியில் ரயில்வே சுரங்க பாதையை பாா்வையிட்ட ஆட்சியா், இவ்வழியே கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்குமாறும், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று ரயில்வே துறையினரிடம் அறிவுறுத்தினாா்.

புதுத்துறை பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்ட ஆட்சியா், இத்திட்டப்பணிகள் நிறைவடையும் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, உரிய காலத்தில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், நகராட்சி ஆணையா் பி.சத்யா, நகராட்சி செயற் பொறியாளா் முத்துசிவம், உதவிப் பொறியாளா் லோகநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா தொடக்கம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா சனிக்கிழமை தொடங்கியது. இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. 20... மேலும் பார்க்க

அரசு திட்டப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை

காரைக்காலில் அரசுத் துறையின் மூலம் திட்ட உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பி... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்கால் வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப்படகில், காரைக்கால், நாகப... மேலும் பார்க்க

பல் மருத்தும் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: அரசுக்கு கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவேண்டும் புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்

காரைக்காலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுத் துறையினா் முழு வீச்சில் செயலாற்றவேண்டும் என புதுவை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் கேட்டுக்கொண்டாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ... மேலும் பார்க்க