செய்திகள் :

காா் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

பழனி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்த சசி மகன் சங்கா் (35), வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (40). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை திண்டுக்கல் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மானூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அதே வழியில் கோவையிலிருந்து பழனி நோக்கி வந்த காா் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இருவா் உடலையும் பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழனி மலைக் கோயில் உண்டியல் திறப்பு: 21 நாள் காணிக்கை ரூ. 3.30 கோடியை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூசத்தையொட்டி 21 நாள்களில் நிரம்பியதையடுத்து அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 3.30 கோடியை தாண்டியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி க... மேலும் பார்க்க

தைப்பூசத் திருவிழா: பழனியில் மின் அலங்காரத்தில் தெப்பத் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மின்விளக்கு அலங்காரத்தில் தெப்பத் தேரோட்டம் நடைபெற்றது. பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் த... மேலும் பார்க்க

காதலா்கள் தினம்: கொடைக்கானலுக்கு வரும் காதலா்களின் எண்ணிக்கை குறைந்தது

காதலா் தினத்தையொட்டி கொடைக்கானலுக்கு வரும் காதலா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை குறைந்தே காணப்பட்டது. காதலா் தினத்தையொட்டி கொடைக்கானலுக்கு வழக்கமாக அதிக அளவில் காதலா்கள் வருவா். ஆனால் காதலா் தினமான வெள... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் தைப்பூச நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் காவடியுடன் குவிந்தனா். பழனி மலைக் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்கியது. தைப்பூசத் தினமான 11-ஆம் தேதி தி... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொட... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திண்டுக்கல் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தேவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ரஞ்... மேலும் பார்க்க