செய்திகள் :

கட்சியின் பெயர் `அ.இ.பு.த.ம.மு.க' சின்னம் - தென்னந்தோப்பு! - சசிகலா அறிவிப்பு

post image

சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். கூடவே அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.

Sasikala
Sasikala

அம்மாவின் மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது!

சசிகலா பேசியதாவது, 'இது எனக்கு ஒரு முக்கியமான நாள். புரட்சித்தலைவர் மக்களுக்காக ஒரு கட்சியை தொடங்கினார். திமுக எனும் தீயசக்தியை வேரறுக்க அந்த கட்சியை வளர்த்தெடுத்தார்.

தமிழக மக்களுக்கு எவ்வளவோ நல்லதுகளை எம்.ஜி.ஆர் செய்தார். அவரை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் கொள்கைகளில் அடிபிறழாமல் பல மக்கள் நலத்திட்டங்களையும் பெண்கள் முன்னேற்றத்துக்குமான ஆட்சியை அம்மா கொடுத்தார்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது. தீயசக்தி திமுக தமிழக மக்களை கசக்கி பிழிந்து வருகிறது.

இதையெல்லாம் பார்த்துதான் அம்மாவின் பிறந்த நாளில் கட்சியை தொடங்கினேன். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என என் கட்சிக்கு பெயரிடுகிறேன்..

Sasikala
Sasikala

நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். எனக்கு கிடைத்திருப்பது மக்களுடைய சின்னம், தென்னந்தோப்பு. தமிழகம், புதுச்சேரி இரண்டு மாநில தேர்தலிலும் போட்டியிடப் போகிறோம்.' என்றார்.

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கி... மேலும் பார்க்க

'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' - காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக தவெக, திமுக, சசிகலா என பலரும் காளியம்மாளுடன் பேசி வந்தனர். அப்படிய... மேலும் பார்க்க

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்... வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தியல், கொள்கைகள், பிரசாரம், தலைவர்களின் பேச்சுகள் மட்டுமல்ல; அதோடு சேர்ந்து பர... மேலும் பார்க்க

``கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ - ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று ரஜினிகாந்த் குறித்து கருத்தொன்றை பேசியிருந்தார். அதாவது, ``தமிழ்நாட்டில் `எம்.ஜி.ஆருக்குப் பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து!’ – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வதந்திகளால் பெட்ரோல் பங்குகளில் அசாதாரண சூழல்!ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போரால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பல உணவகங்கள் விறகு அடுப்புகள... மேலும் பார்க்க

``அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.!" - காளியம்மாள் பேட்டி

ஓராண்டு கால அரசியல் இடைவெளிக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொ... மேலும் பார்க்க