செய்திகள் :

'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' - காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!

post image

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக தவெக, திமுக, சசிகலா என பலரும் காளியம்மாளுடன் பேசி வந்தனர். அப்படியிருக்க அவர் எப்படி அதிமுகவில் இணைந்தார்?

காளியம்மாள்
காளியம்மாள்

காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்த சமயத்திலேயே விஜய் தரப்பு அவரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. இதுசம்பந்தமாக மேலும் தகவல்களை கூறும் விவரமறிந்தவர்கள், 'கடந்த டிசம்பர் மாதமே காளியம்மாளை விஜய் தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்துப் பேசியிருந்தார்.

தனிப்பட்ட முறையில் ஒன் டு ஒன்னாக அந்த சந்திப்பு நடந்திருந்தது. அப்போது காளியம்மாள் தவெக சம்பந்தமாக நிறைய சந்தேகங்களை விஜய்யிடமே கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டார். விஜய்யும் தன்னுடைய கட்சிக்கான பெண் முகமாக காளியம்மாள் இருப்பார் என நம்பினார். இருவருக்கும் அந்த சந்திப்பு நிறைவானதாக அமைந்தது. ஆனால், விஜய்யின் வியூக வகுப்புப் புள்ளியான ஜான் ஆரோக்கியசாமிக்கு ஆரம்பத்திலிருந்ததே காளியம்மாளை கட்சிக்குள் சேர்ப்பதில் விருப்பமில்லை.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

காளியம்மாள் விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தத் தகவலை அவர் சீமான் தரப்புக்கு பகிர்ந்திருக்கிறார் என்கிறார்கள். அத்தோடு காளியம்மாளை நேர்காணல் செய்வதைப் போல, 'ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கும் போதே இன்னொரு கட்சியில் வந்து பேசுகிறீர்கள். இங்கிருந்து கொண்டு வேறொரு கட்சிக்கு செல்லமாட்டீர்கள் என என்ன நிச்சயம்?' என பேச்சுவார்த்தையை உடைத்து விடுவதைப் போல கேட்டிருக்கிறார். அதிலேயே காளியம்மாள் அப்செட். ஆனாலும் விஜய் எப்படியும் அழைப்பார்.

நல்ல பொறுப்பை கொடுப்பார் என காளியம்மாள் காத்திருந்தார். விஜய்யும் சில சமயங்களில் 'அவங்க ஏன் இன்னும் வரல..' என காளியம்மாள் குறித்து அப்டேட்டும் கேட்டிருக்கிறார். சுற்றியிருக்கும் வியூக தரப்பு எதை எதையோ சொல்லி சமாளித்துவிட்டது என்கிறார்கள்.

இடையில் திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பு காளியம்மாளிடம் பேசிப் பார்த்தது. கட்சி ஆரம்பிக்கும் முடிவை எடுத்தவுடன் சசிகலா தரப்பும் தீவிரமாக முயன்றிருக்கிறது. காளியம்மாள் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. இறுதியாகத்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் களத்தில் இறங்கி காளியம்மாள் மனதை மாற்றியிருக்கிறார்.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay - தவெக விஜய்

ஓராண்டாக காத்திருந்தும் விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால், ஓ.எஸ்.மணியனின் அழைப்பை ஏற்கும் மனநிலைக்கு காளியம்மாள் வந்திருக்கிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பெண்களின் வாக்குகளை மையப்படுத்தியதாக இருக்கப்போவதால், அதிமுகவின் பிரசாரத்துக்கு காளியம்மாள் வலுசேர்ப்பார் என எடப்பாடி நம்புகிறார்' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹார்முஸ் ஜலச... மேலும் பார்க்க

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கி... மேலும் பார்க்க

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்... வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தியல், கொள்கைகள், பிரசாரம், தலைவர்களின் பேச்சுகள் மட்டுமல்ல; அதோடு சேர்ந்து பர... மேலும் பார்க்க

``கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ - ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று ரஜினிகாந்த் குறித்து கருத்தொன்றை பேசியிருந்தார். அதாவது, ``தமிழ்நாட்டில் `எம்.ஜி.ஆருக்குப் பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வ... மேலும் பார்க்க

கட்சியின் பெயர் `அ.இ.பு.த.ம.மு.க' சின்னம் - தென்னந்தோப்பு! - சசிகலா அறிவிப்பு

சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். கூடவே அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.Sasikalaஅ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து!’ – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வதந்திகளால் பெட்ரோல் பங்குகளில் அசாதாரண சூழல்!ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போரால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பல உணவகங்கள் விறகு அடுப்புகள... மேலும் பார்க்க