செய்திகள் :

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

post image

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன.

இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் விடமாட்டேன் என்று நிற்கிறது ஈரான்.

போரும் முடிந்தபாடில்லை.

ஏற்கெனவே இந்தியாவில் எல்.பி.ஜி தட்டுப்பாடு எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தியா வந்த 'கச்சா எண்ணெய்' கப்பல்

இந்த நேரத்தில், நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று மும்பை துறைமுகத்தை அடைந்திருக்கிறது.

அந்தக் கப்பலின் பெயர் ஷென்லாங். இது லைபீரியா கொடியிட்ட கப்பல் என்றாலும், அந்தக் கப்பலை ஓட்டி வந்தது என்னவோ இந்திய மாலுமி. அவர் பெயர் சுக்ஷாந்த் சிங் சந்து.

சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுராவில் தொடங்கியிருக்கிறது இந்தக் கப்பலின் பயணம்.

இந்தக் கப்பல் கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதை மீறி, அதன் வழியாக எந்தக் கப்பல் வந்தாலும் வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது ஈரான்.

இதனால், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் குறியில் இருந்து தப்பிக்க இந்தியா வந்த கப்பல் டிரிக்ஸ் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளது.

AIS
AIS

AIS

பொதுவாக கப்பலில் 'Automatic Identification System (AIS)' என்கிற ஒன்று இருக்கும்.

இது கப்பலின் பாதுகாப்பிற்கும், கப்பலைக் கண்காணிப்பதற்கும் இருக்கும் சிஸ்டம் ஆகும்.

இதன் மூலம், தொடர்ந்து கப்பலைக் கண்காணிக்கலாம். எதிரில் என்ன கப்பல் வருகிறது, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, அதன் வகை, எடை என்ன என்பதை எல்லாம் காட்டும்.

இதன் மூலம், ஒரு கப்பலை இன்னொரு கப்பல் இடிப்பது தடுக்கப்படுகிறது.

அடுத்ததாக, கப்பலுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எளிதாக இந்த சிஸ்டம் 'கப்பல் எங்கு இருக்கிறது' என்பதை கண்டுபிடிக்க முடியும்.

இது டிராபிக்குகளைக் குறைக்கவும் உதவும்.

'ஸ்விட்ச் ஆஃப்' டெக்னிக்

சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும்போது மட்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை 'ஆஃப்' செய்திருக்கிறது.

இதனால், ஈரானால் இந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெற்றிகரமாக அந்த ஜலசந்தியைக் கடந்த உடன் கப்பல் மீண்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை 'ஆன்' செய்து பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கப்பலில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் பயணித்திருக்கின்றனர். மொத்தம் 29 பேர்.

ஷென்லாங் கப்பல் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்திருக்கிறது.

இந்தக் கச்சா எண்ணெயை தரையிறக்க கிட்டத்தட்ட 36 மணிநேரம் ஆகும்.

அதன் பின், மீண்டும் ஷென்லாங் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கிளம்ப உள்ளது.

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கி... மேலும் பார்க்க

'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' - காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக தவெக, திமுக, சசிகலா என பலரும் காளியம்மாளுடன் பேசி வந்தனர். அப்படிய... மேலும் பார்க்க

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்... வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தியல், கொள்கைகள், பிரசாரம், தலைவர்களின் பேச்சுகள் மட்டுமல்ல; அதோடு சேர்ந்து பர... மேலும் பார்க்க

``கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ - ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று ரஜினிகாந்த் குறித்து கருத்தொன்றை பேசியிருந்தார். அதாவது, ``தமிழ்நாட்டில் `எம்.ஜி.ஆருக்குப் பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வ... மேலும் பார்க்க

கட்சியின் பெயர் `அ.இ.பு.த.ம.மு.க' சின்னம் - தென்னந்தோப்பு! - சசிகலா அறிவிப்பு

சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். கூடவே அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.Sasikalaஅ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து!’ – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வதந்திகளால் பெட்ரோல் பங்குகளில் அசாதாரண சூழல்!ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போரால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பல உணவகங்கள் விறகு அடுப்புகள... மேலும் பார்க்க