செய்திகள் :

"கிணத்துக்கடவு எங்களுக்குத்தான்" - போராட்டத்தில் குதித்த பாஜகவினர்; அதிர்ச்சியில் வேலுமணி!

post image

சட்டசபைத் தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்பட்டது. வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோருடன் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜனும் கோவையில் போட்டியிட முயற்சி செய்து வந்தார்.

கோவை
கோவை

கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளை பாஜக கேட்டது. இவற்றில் 2 தொகுதிகளாவது பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வானதி சீனிவாசன், அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கிணத்துக்கடவு  தொகுதியில் சீட் எதிர்பார்த்து பணியாற்றிய வசந்தராஜன் அதிருப்தியடைந்தார். அவரின் ஆதரவாளர்களும் விரக்தியடைந்தனர்.

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்

இதுகுறித்து பாஜக கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்துவிட்டதாக ஆதங்கப்பட்டனர்.

ஒருகட்டத்தில், 'வேண்டும்.. வேண்டும்.. கிணத்துக்கடவு வேண்டும்' என்ற கோஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்கிற முழக்கத்துடன் ஈச்சனாரி பகுதியில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

''நாங்கள் எப்படி தேர்தல் பணி செய்ய முடியும்'' என்று கேள்வி எழுப்பினார். அப்போது திடீரென தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பாஜக வசந்தராஜன்
பாஜக வசந்தராஜன்

அவரை காவல்துறையினர் மற்றும் நிர்வாகிகள் மீட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சமாதானப்படுத்தினார்கள். பாஜக வசந்தராஜன் ஆதராவளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுகவினரிடம் அதிர்சியை ஏற்படுததியது.

பாலியல் குற்றங்கள் குறித்து சர்ச்சை கருத்து: "மனப்பூர்வமான மன்னிப்பு"- எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ

நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஒரு பெண் புதருக்குப் பின்னால் மறைந்து நி... மேலும் பார்க்க

கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் போட்டியிடுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட விவரங்கள் இந்த மாத தொடக்கத்தில் மின்னஞ்சல்... மேலும் பார்க்க

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? - பட்டியலை தயார் செய்த திமுக!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகளையும் தி.மு.க தலைமை இறுதி செய்துள்ளது. விரைவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கா... மேலும் பார்க்க