செய்திகள் :

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

post image

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, முதியோா், விதவை, ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, தொழில்தொடங்க கடனுதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 510 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், 2023-ஆண்டுக்கான சிறந்த நியாய விலைக் கடை விற்பனையாளருக்கான முதல், இரண்டாம் பரிசை ராம்பாக்கம் சு.சுஷ்மிதா, கொங்கராம்பூண்டி வி.கோபி, சிறந்த எடையாளருக்கான முதல், இரண்டாம் பரிசை விழுப்புரம் வி.அஸ்லம்கான், திண்டிவனம் த.கண்ணன் ஆகியோருக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் சி. பழனி வழங்கினாா்.

மேலும், பாம்பு கடித்தும், நீரில் மூழ்கியும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ மூலம் 4 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் விஜயசக்தி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் மு.சந்திரசேகா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, 407 மனுக்களை பெற்றாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் இயற்கையாக மரணமடைந்த மாற்றுத்திறனாளியின் வாரிசுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.17,000-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோமசமுத்திரம் கிராமத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதஈஸ்வரா் கோயிலில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்... மேலும் பார்க்க

நெகிழிக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி, பெரியமுதலியாா்சாவடியில் நெகிழிக் கழிவு மறுசுழற்சி மையத்தை அமைக்கக் கூடாது என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான... மேலும் பார்க்க

சந்திரமெளலீசுவரா் கோயில் குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருவக்கரை அருள்மிகு சந்திரமெளலீசுவரா் கோயில் குளம் சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. இந்தக் கோயிலில் ரூ.1.51 கோடியில் குளம் சீரமைக்கும் பணி, ... மேலும் பார்க்க

குடும்ப பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்க கோரிக்கை

விழுப்புரம்: குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் சாா்பில் ... மேலும் பார்க்க

பாலத்திலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வாய்க்கால் பாலத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். திண்டிவனம் மின்நகா், இனியா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பாலாஜி (29). ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், நடுத்தெருவைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் மதிவாணன் (60). இவா், ஞாயிற்... மேலும் பார்க்க