செய்திகள் :

ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக்

post image

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் அபுதாபியின் வெளிநாட்டு உதவி நிறுவனம், 'அபுதாபி மேம்பாட்டு நிதியம் (ADFD)'.

'The Dawn Newspaper' தகவலின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிதியத்திடமிருந்து 2019-ம் ஆண்டு இந்தக் கடனை வாங்கியிருக்கிறது பாகிஸ்தான்.

ஈரான் போரினால் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அரசியல் தொடங்கி பொருளாதாரம் வரை பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

இதனால், அபுதாபி மேம்பாட்டு நிதியம் பாகிஸ்தானிடம் அவர்கள் வாங்கியிருந்த மொத்த கடன் தொகையையும் திருப்பிச் செலுத்துமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

கடன்
கடன்

இதனையடுத்து, பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், மொத்த கடன் தொகையான 3.45 பில்லியன் டாலர்களையும் அந்த நிதியத்திற்கு திருப்பிச் செலுத்தியிருக்கிறது.

திருப்பி செலுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தனது எக்ஸ் பக்கத்தில், "அபுதாபி வளர்ச்சி நிதியத்திற்கு செலுத்தவேண்டிய 1 பில்லியன் அமெரிக்க டாலர் டெபாசிட்டை, பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஏப்ரல் 23, 2026-ம் தேதி திருப்பிச் செலுத்தியது.

கடந்த வாரம் 2.45 பில்லியன் டாலர் வைப்புத்தொகை திருப்பிச் செலுத்தப்பட்டது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கவேண்டிய மொத்த வைப்புத்தொகையான 3.45 பில்லியன் டாலர் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானிற்கு ஏது இந்தப் பணம்?

இதுவும் கடன்தான். சமீபத்தில், சவுதி அரேபியாவிடமிருந்து பாகிஸ்தான் இரண்டு தவணைக் கடன் பெற்றிருந்தது. அதன் இரண்டாம் தவணையான 1 பில்லியன் டாலர் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பாகிஸ்தான் கைகளுக்குக் கிடைத்தது.

இதை வைத்துதான் நேற்று கடனை முழுவதுமாக அடைத்து முடித்துள்ளது பாகிஸ்தான்.

கோவை: ஸ்ட்ராங் ரூம்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்... மேலும் பார்க்க

``ரத்தம், வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி, இன்று..!"- ஆம் ஆத்மியிலிருந்து ராகவ் சதா விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

`ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்டோரும்...' - பாஜகவில் இணைந்த ராகவ் சதா தகவல்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

"மாயாஜாலக் கணக்குகளை மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்"- வாக்குப்பதிவு குறித்து தவெக விஜய்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சதவிகிதம் பதிவாகியிருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "குறிப்பி... மேலும் பார்க்க

"சோதனை நடத்துவது தப்பு கிடையாது; உண்மையை மறைப்பது ஏன்?"- ஆதாரத்தை காட்டிய செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை 'சோதனை' என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் வருமான வரித்து... மேலும் பார்க்க

நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' - Gen Z அரசியல்| அலசல்

Gen Z அரசியல்நேபாளத்தில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷா (பாலேந்திர ஷா) வெற்றிபெற்று மார்ச் 27 அன்று பிரதமராகப் பதவியேற்றார். இந்த... மேலும் பார்க்க