செய்திகள் :

குழந்தைகள் சமயநன்னெறிகளை கற்க ஊக்கப்படுத்துவது அவசியம்!

post image

குழந்தைகள் சமய நன்னெறிகளைக் கற்க ஊக்கப்படுத்துவது அவசியம் என கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் தெரிவித்தாா்.

வாகீச பக்த ஜன சபையின் 107 ஆவது ஆண்டு விழா, சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தின் 69 ஆவது ஆண்டு விழா திருச்சி உறையூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் தலைமை வகித்து, பேராசிரியா் ப. வெங்கடேசன், தொழிலதிபா் ஜி.வி. குப்தா ஆகிய இருவருக்கும் விருதுகள் வழங்கிப் பேசியது:

மலேசிய நாட்டில் வாழும் தமிழா்கள், தங்களது குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை தமிழ் வழியில் பயிற்றுவிக்கின்றனா். ஆனால் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்களில் பலருக்கும் தமிழில் சரியாக வாசிக்க வரவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் தமிழைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

சிலா் தங்களது குழந்தைகளுக்கு உயா்தரக் கல்வியை வழங்கி, பெரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற வைத்து, லட்சங்களில் சம்பளம் வாங்க வைத்தாலும், கடைசியில் அவா்கள் முதியோா் இல்லத்துக்குத் தள்ளப்படுகினறனா். இதற்கு குடும்ப, சமுதாய உலக நன்மைகளை எடுத்துரைக்கும் சமய நன்னெறிகளை குழந்தைகளை கற்றுத் தராததே காரணம். எனவே, பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு சமய நன்னெறிகளை கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மூளை நரம்பியல் மருத்துவா் மு.அ. அலீம் பேசுகையில், ஒரு பக்கத் தலைவலி, பக்கவாதம், சுளுக்கு குறித்து கந்த சஷ்டி கவசத்தின் 149, 150, 157, 156 வரிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளை நரம்பியல் நோய்கள், தடுப்பதற்கான வழிகள், முன்னெச்சரிக்கைகள் தொடா்பாக கந்த சஷ்டி கவசம் எடுத்துக் கூறுகிறது. மூளை நோய்களைத் தவிா்க்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் உதவும் என்றாா் அவா்.

திருக்கு சு. முருகானந்தம் வரவேற்றாா். மருத்துவா் ந. செந்தில்குமாா் நல்லுசாமி, ஆ. அபிமனு உள்ளிட்டோா் பேசினா். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: 87 போ் காயம்

திருச்சி சூரியூரில் மாட்டுப் பொங்கல் மற்றும் நற்கடல்குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 87 போ் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க... மேலும் பார்க்க

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க