செய்திகள் :

``கேரள பாஜக-வில் இருந்து விலகி..! ; தவெக-வில் இணைய சொல்லி விஜய் கேட்டார்" - நடிகர் தேவன்

post image

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகர் தேவன்.

2004-ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை நிறுவினார். 2004, 2006-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.

2020-ஆம் ஆண்டு நவ கேரள மக்கள் கட்சி என்கிற கட்சியை மீண்டும் நிறுவினார். இந்தக் கட்சியை அடுத்த ஆண்டே, அதாவது 2021-ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்து, பாஜகவில் தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

தற்போது பாஜகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் தேவன்
நடிகர் தேவன்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த நெஞ்சினிலே, ஷாஜகான், சிவகாசி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைய இருப்பது குறித்து தேவன் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

“நான் பாரதிய ஜனதா கட்சிக்காக மிகவும் தீவிரமாகவும், துணிச்சலாகவும், பல ஆபத்துகளை எதிர்கொண்டும் தீவிரமாகப் பணியாற்றி வந்தேன்.

ஆனால், அவர்களால் என்னுடைய லட்சியத்தையும், திட்டமிடலையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இதற்கெல்லாம் எதிர்ப்பாக இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேர்தலில் வெற்றி பெறுவதில் விருப்பமில்லை என்றுதான் நினைக்கிறேன். பணம் ஈட்டவே ஆர்வம் காட்டுகிறார்கள். அதை நான் எதிர்த்தேன்.

என்னை ஒரு கட்டத்திற்குள் பூட்டி வைக்கப் பார்த்தார்கள். 2024-25 காலக்கட்டத்தில், இந்தக் கட்சியிலிருந்து விலகலாம் என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். பா.ஜ.க.-வில் தொடர்ந்து நீடிப்பதன் மூலம் ஒரு அரசியல்வாதியாக என்னுடைய லட்சியம் நிறைவேறாது என்று நினைத்தேன். அதனால் பா.ஜ.க.-விலிருந்து ராஜினாமா செய்தேன்...

இதைப் பார்த்த ஜோசப் விஜய், சிலரை என்னிடம் அனுப்பி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எங்களுக்குள் மிகவும் விரிவான, சுவாரசியமான உரையாடல் நடந்தது. இறுதியாக, சென்னையில் உள்ள தவெகவின் மூத்த தலைவர்களுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினேன். கொள்கை அளவில் நான் அதற்குச் சம்மதித்தேன்.

எனவே, ஜோசப் விஜயைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவரைச் சந்திப்பதற்காகச் செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

அந்தச் சந்திப்புக்கான வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். எனவே, இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன்.” என்றிருக்கிறார்.

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" - முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

வேலை தேடி வந்த இடத்தில் காதல்; எதிர்ப்பால் திருமணத்தை ரத்து செய்த தன்பால் ஈர்ப்பாளர்களான தோழிகள்

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அதுபோன்ற திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புனே பிம்ப்ரி போலீஸ் நிலையத்தில் போலீஸாகப் பணியா... மேலும் பார்க்க

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திரு... மேலும் பார்க்க

சட்டமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டாத உதயநிதி; அப்செட்டில் திமுக எம்எல்ஏ-க்கள்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முக்கியமான விவாதங்களின்போது ஆப்செண்ட் ஆகிவிடுவதால் திமுக எம்.எல்.ஏக்களே அதிர... மேலும் பார்க்க

புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்'; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரி... மேலும் பார்க்க

ஆரணி: காதலிக்காகக் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை... சீரமைத்து புத்துயிர் கொடுத்த தமிழ்நாடு அரசு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது `கண்ணாடி மாளிகை’ எனப் பெயர் பெற்ற பிரமாண்ட அரண்மனை. சுமார் 200 ஆண்டு... மேலும் பார்க்க