செய்திகள் :

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்... நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

post image

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவில் 15 - 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள், கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கிறார்கள் என்கிறது.

2047-ல் ‘வளர்ந்த இந்தியா’ என்ற லட்சிய இலக்குடன் நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்களின் மனித வளம் பயன்படுத்த இயலாத வகையில் இருப்பது, நம் நாட்டின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தல். ஒருபுறம் நிறுவனங்கள், திறன் கொண்ட தகுதியான இளைஞர்கள் கிடைப்பதில்லை என்கின்றன. மறுபுறம், கையில் டிகிரியை வைத்துக்கொண்டு இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். இதற்கு இடையில் நமது கல்வி முறை பல் இளித்துக்கொண்டிருக்கிறது.

இந்தியக் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட்டால் போதும் என்று நினைத்து, கடன் வாங்கியாவது பல லட்சங்களைச் செலவு செய்கிறார்கள். ஆனால், என்ன படித்தாலும் வேலை கிடைக்காது என்றால் அந்தக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்?

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புத் திறன் போதாமை இருப்பதைக் காட்டி, தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இன்னொரு பக்கம், அதற்கான பயிற்சி வகுப்புகள் உருவாகின்றன. அது பெரும் சந்தையாகி, கட்டணம் என்ற பெயரில் மக்களை இன்னும் உறிஞ்சுகிறது. தேர்வு நடைமுறைகளில் நடக்கும் குளறுபடிகளும், மோசடிகளும் இளைஞர்களுக்குத் தண்டனையாக அமைகின்றன.

கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகிய மூன்றும்தான் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி இருக்கக் கூடாது. எனவே, பள்ளியில் தொடங்கி கல்லூரிகள், பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் வரையிலான ஒட்டுமொத்த கட்டமைப்பையுமே சீர்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

2047-ல் வளர்ந்த இந்தியாவாக மாறுவது புதிய சாலைகள், விமான நிலையங்கள், பெரிய முதலீட்டு அறிவிப்புகளால் மட்டும் நடக்காது. இன்று பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்குத் தரமான கல்வியும், கல்லூரி மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புக்கான திறனும் கிடைக்கச் செய்ய வேண்டும். பாடப் புத்தக அறிவுடன் செயல்முறை அறிவு, டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்ப அறிவு, தொழில் துறை அனுபவம் ஆகியவற்றையும் கல்வியின் பகுதியாக்க வேண்டும்.

இந்தியாவின் உண்மையான செல்வம்... இளைஞர்களின் திறனில்தான் இருக்கிறது. அதிலிருந்து விலகி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உரிய பயிற்சிகள் கிடைக்கச் செய்து, அந்த வளத்தை வளர்த்தெடுப்போம். இந்தியா வளரும்!

- ஆசிரியர்

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' - அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத... மேலும் பார்க்க

'திமுக அரசு மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை முடக்கியது!- ஆதவ் ஆவேசம்!

சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த விவாதத்தின் போது 'அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்' குறித்து கடும் வாக்குவாதம் எழுந்தது. கோவி.செழியன்திமுக முன்... மேலும் பார்க்க

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' - பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் திடீரென மாலை நேரத்தில் அவைக்குள் வந்து செங்கோட்டையன் அருகே அமர்ந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவைக்... மேலும் பார்க்க

`அரசுக்கு திமுக பஞ்சபாண்டவர்களாக துணை நிற்கும்!' – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், ``மாநில அந்தஸ்துக்காக அரசு குரல் கொடுக்கும்போது, பஞ்சபாண்டவர்கள் போல தி.மு.க எப்போத... மேலும் பார்க்க

`தம்பி ஆதவ், நீ எழுந்தா தான் சண்டை வருது; 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க..!'- பிரேமலதா

சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், "இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்ல... மேலும் பார்க்க

`சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலா... மேலும் பார்க்க