செய்திகள் :

கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்

post image

கோவை விமான நிலையம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கடந்த நவம்பர் 2-ம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடே அதிர்ந்த இந்த வழக்கில், 

கோவை மாணவி வழக்கு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால், அவர்களின் கால்களில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆவர். கொலை, திருட்டு, வழிப்பறி, அடிதடி போதை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளன. அவர்களை காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்தபோது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாள், அந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பு, 3 பேரும் அன்னூர் அருகே செரையாம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு தேவராஜ் என்பவரின் ஆட்டு பண்ணை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனால் 3 பேரையும் தேவராஜ் கண்டித்துள்ளார். அப்போது தேவராஜை கட்டையால் தாக்கி சென்றுள்ளனர். நவம்பர் 6-ம் தேதி கோவில்பாளையம் அருகே தேவராஜின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

கொலை
கொலை

அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரையும் கஸ்ட்டியில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மாமியாரைக் கொலைசெய்த மருமகன் - உயிருக்குப் போராடும் மனைவி; என்ன நடந்தது?

காஞ்சிபுரம், அருந்ததி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மனைவி சந்தவள்ளி (54). சந்தவள்ளியின் அம்மா திலகா (70). இவர்கள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கூலி வேலை செய்யும் லட்சுமணன் போதைக்க... மேலும் பார்க்க

`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகை குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட... மேலும் பார்க்க

1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு ... மேலும் பார்க்க

``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர். இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து க... மேலும் பார்க்க

விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்

குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1... மேலும் பார்க்க