செய்திகள் :

சமையலர் பாப்பாள் தீண்டாமை வழக்கு: 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை; "திருப்தி இல்லை" - ப.பா.மோகன்

post image

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி, இப்பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பாப்பாளைச் சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சாதிய ரீதியிலான இந்த வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இப்பிரச்னையை கையில் எடுத்தன.

பாப்பாளைச் சமையல் செய்யவிடாமல் தடுத்த அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்ட 36 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பாப்பாள்
பாப்பாள்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ப.பா.மோகன்
வழக்கறிஞர் ப.பா.மோகன்

இந்த வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-இல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இருதரப்பு சாட்சியங்கள் விசாரணை, அரசுத் தரப்பிலான விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக நீதிபதி சுரேஷ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழிந்த நிலையில், 32 பேர் மற்றும் பாதிக்கப்பட்ட பாப்பாள் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி, சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி சுரேஷ் மற்ற 26 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான பழனிசாமி, சக்திவேல், சண்முகம், துரைசாமி,சீதாலட்சுமி, வெள்ளியங்கிரி ஆகிய 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார்.

திருப்தி இல்லை... மேல்முறையீடு செல்வோம்...

இந்த வழக்கில் பாப்பாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு அரசுப் பணியாளரான பாப்பாள் பட்டியல் சமூகத்தினர் என்பதற்காகவே சமைக்கக் கூடாது என்று திட்டமிட்டே ஆதிக்கச் சமூகத்தினர் தடுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க அப்பட்டமான வன்கொடுமையாகும்.

இதற்கு அப்போதைய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் காவல் துறையினர் உடந்தையாக இருந்துள்ளனர். பாப்பாளைப் பாதுகாக்க வேண்டிய மீனாட்சி, பாப்பாளைப் பணியிட மாறுதல் செய்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆனால், 36 ஆவது குற்றவாளியான வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இந்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது.

இந்த வழக்கை காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி நிலையிலான அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும். அதிலும், அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த நுட்பமும், அறிவும் தெரிந்திருக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால், பாப்பாள் வழக்கில் இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. அதனால், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை.

பாப்பாள்
பாப்பாள்

இந்த வழக்கில் தொடர் விசாரணை கோரி, நீதிமன்றத்தில் மனு அளித்தோம். மனு அளித்த அன்றைய தினமே எங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணையின்போது, ஆசிரியர்கள் பலர் பிறழ்சாட்சியாக மாறினர். இருப்பினும், சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன் வைத்த வாதங்களை முன்வைத்து நீதிமன்றம் 6 பேருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதில், சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரைத் தடுத்து நிறுத்துதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், சமூக ரீதியாக தொல்லை கொடுத்தது என்ற பிரிவுகளின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கும், எங்களுக்கும் திருப்தி இல்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்" என்றார்.

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்... மேலும் பார்க்க

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க