செய்திகள் :

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! - காரணம் என்ன?

post image

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக இந்தியர்கள் 288 பேர் அடங்குவர். தவிர, சீனா (100), அமெரிக்கா (65), உக்ரைன் (53), ஆஸ்திரேலியா (35) மற்றும் பிரிட்டன் (33) ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.

 நேபாள பிரதமர்
நேபாள பிரதமர்

இந்த நிலையில் நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்தது. அப்போது நேபாள அரசு, 'சர்வதேசத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுமதிக்க முடியாது. நாட்டின் சொந்த மீட்புக் குழுக்களே மீட்புப் பணிகளைச் சமாளிக்க வல்லவை' என சர்வதேச உதவியைப் புறக்கணித்தது.

நேபாளத்தின் இந்த முடிவிற்கு முக்கியக் காரணம், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தின் போது அது பெற்ற அனுபவமே ஆகும்.

வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டுத் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்தபோது எழுந்த ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மைச் சிக்கல்களை நேபாள அரசாங்கம் நினைவு கூர்ந்தது. பல குழுக்கள் இருந்தும், நாடுகளுக்கு இடையேயான போட்டியால், மீட்புப் பணிகளை நிர்வகிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தின.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதரக அழுத்தங்களைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில தொழில்நுட்ப உதவிகளைப் பெற நேபாளம் சம்மதித்துள்ளது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

அதன் அடிப்படையில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் நிபுணத்துவ உதவிகளைப் பெற நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக சுரங்கப் பாதை மீட்புப் பணிகள், டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் போன்ற சிறப்புத் துறைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிபுணர்களை அனுமதிக்கத் தீர்மானித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் மருத்துவக் குழு, சுரங்கப் பாதை மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவை நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேபாள வெளியுறவு அமைச்சர் சிசிர் கனாலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெனரேட்டர்கள், உணவுப் பொட்டலங்கள், குடிநீர் சுத்திகரிப்பு, மாத்திரைகள் உள்ளிட்ட 10 டன் நிவாரணப் பொருட்களுடன் 4 விமானங்கள் நேபாளம் சென்று சேர்ந்துள்ளன. அத்துடன், 11 பேர் கொண்ட மருத்துவ மற்றும் சுரங்க மீட்பு நிபுணர்கள் குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது. உடல்களை விரைவாக அடையாளம் காணவும், டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் போதிய உள்கட்டமைப்பு இல்லாததால், சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் பணிகளை விரைவுபடுத்த நேபாள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க