செய்திகள் :

சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

post image

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வரும் சவுக்கு சங்கர், கைது நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது சிறையில் இருக்கிறார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியான சவுக்கு சங்கர், பிணை நிபந்தனைகளை மீறியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் சவுக்கு சங்கரை ஆந்திராவில் வைத்து போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறையில் தற்போது சங்கர் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் மறைவு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஹார்முஸை முடக்கும் அமெரிக்க முடிவு: `எதிர்க்கும் உலக நாடுகள்' - மீண்டும் பின்னடைவில் ட்ரம்ப்!

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா. இறுதியில் இது ஈரான் - அமெரிக்கா போர் எனப் பேசும் அளவு இரு நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதன் உச்சமாக உலக நாடுகளுக்கு எ... மேலும் பார்க்க

அதிர வைத்த விஜய்; எச்சரித்த முதல்வர் தரப்பு - தூத்துக்குடி அஜிதா திமுக-வில் இணைந்த பின்னணி!

தூத்துக்குடி தவெக நிர்வாகியான அஜிதா நேற்று திடீரென திமுக-வில் இணைந்திருக்கிறார். இதன் பின்னால் லோக்கல் அமைச்சர் ஒருவரின் தீவிர காய் நகர்த்தலும் கனிமொழியின் விருப்பமும் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர் விவ... மேலும் பார்க்க

தவெக: ``தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடந்திருக்கிறது" - சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா? திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் த... மேலும் பார்க்க

`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். ஆனால், அசைக்க முடியாத சக்தியாக இருந்த அந்த இயக்கம... மேலும் பார்க்க

போப் 'இடதுசாரி' அரசியல் செய்கிறார்; கொரோனா காலத்தில் பாதிரியார்கள் கைது நடந்ததே? - ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV-ஐ கடுமையாக விமர்சித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போப் லியோ "குற்றவா... மேலும் பார்க்க