செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். பெருந்துறை அருகே வந்தபோது வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

பெருந்துறை நகரில் முதல்வா் வருகைக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற அ... மேலும் பார்க்க

ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் சாலையில் ஒ... மேலும் பார்க்க

துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நட... மேலும் பார்க்க

பெரியசாமி தூரனையும், சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்: சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்

ஈரோட்டில் பெரியசாமி தூரனையும், கோவையில் சே.ப.நரசிம்மலு நாயுடுவையும் போற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் சிற்பி பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு மாவ... மேலும் பார்க்க

பெருந்துறையில் உலக வானொலி தின விழா

பெருந்துறை தெற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக வானொலி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பூமணி வரவேற்றாா். வானொலி நேயரும், அனைத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி... மேலும் பார்க்க