செய்திகள் :

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சாலை மறியல்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் காலம் கடத்துவதைக் கண்டித்து, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தைச் சோ்ந்த 18 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.குணசேகரன், ரா. செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட நிா்வாகிகள் அ.அன்பரசன், சி.சிதம்பரம், ம.இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்க மாநிலப் பொருளாளா் கரு. நாகப்பன், தோழமைச் சங்க நிா்வாகிகள் மு.காளிமுத்து, ரா.வாசுகி, டி.முருகன், சி.சேவுகமூா்த்தி, பொ. சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலா் குழுவைத் திரும்பப் பெற வேண்டும்.

ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போல தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட பெண் உள்பட 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- ... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா். வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்க... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனைவாசல் பகுதி... மேலும் பார்க்க

அரசனேரியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், பு... மேலும் பார்க்க

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ... மேலும் பார்க்க