சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்' – 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும...
"சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.!" - நெகிழும் டீக்கடை குமார்!
ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில் நேற்று (டிச.3) சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குமார் கேக், வெட்டியதோடு மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புத்தாடைகளை வழங்கியிருக்கிறார்.

சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்!
கிட்டத்தட்ட 200 தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியிருக்கிறார்.
மேலும் சில்க் ஸ்மிதா புகைப்படம் பொருந்திய 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டரையும் மக்களுக்கு வழங்கியிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
மிகப்பெரிய ரசிகன்
"ஈரோட்டில 22 வருசமா டீ கடை நடத்தி வரேன். சில்க் ஸ்மிதாவின் மிகப்பெரிய ரசிகன் நான்.
வருஷம் வருஷம் அவுங்க பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவேன்.
சினிமாவில கவர்ச்சியா மட்டுமே காட்டின அவுங்களோட உண்மையான குணத்தையும் வாழ்க்கையில அவுங்க கஷ்டப்பட்ட சில விஷயங்களையும் கேள்விப்பட்ட பிறகு மிகப்பெரிய ரசிகராகிட்டேன்.

சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டம்
1992-ல வெளியான பாக்யராஜ் சாரோட 'ராசுக்குட்டி' படம் ஈரோட்டில தான் எடுத்தாங்க.
அப்போ அந்த சூட்டிங் ஸ்பாட்டில வேலை பார்த்தேன். அந்த சமயத்துல போண்டா மணி உள்ளிட்ட சிலர்கிட்ட சில்க் ஸ்மிதாவை பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.
"நல்ல மனசு கொண்டவுங்க , நிறைய பேருக்கு உதவியிருக்காங்க, வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க" அப்படி'ன்னு நிறைய சொன்னாங்க.
இதெல்லாம் கேட்ட பிறகு அவுங்களுக்கு எதாச்சும் நம்ம பண்ணனும்னு நினைச்சுதான் அவுங்க பிறந்தநாளை கொண்டாடிட்டு வரேன்.
20 வருசமாக அவுங்களோட போட்டோவை கடையில வச்சுருக்கேன்.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவுங்க போட்டோ பொருந்திய காலண்டரை கொடுத்திட்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில இல்லாதவுங்களுக்கு உதவலாம்'னு சொல்லி தூய்மைப் பணியாளர்கள், முதியவர்கள், சாலை ஓரத்தில் இருக்கிறவங்களுக்கு அன்னதானம் செய்யுறேன்.
இது எனக்கு மன திருப்தியைக் கொடுக்குது. சில்ஸ் ஸ்மிதா மேல மதிப்பும், மரியாதையும் வச்சுருக்கேன்" என்று நம்மிடம் பகிர்ந்தார்.
















