செய்திகள் :

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

post image

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலைசெய்ய முயன்ற சம்பவத்தில், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்தவர் அக்பர் அலி (50). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (35). இவர்களுக்கு பர்வீன் (18), பாருக் (13) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் அக்பர் அலியின் தாயார் சிக்கந்தர் பீவி (60) வசித்து வருகிறார். நீண்டகாலமாக இவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அக்பர் அலி திடீரென பெட்ரோல் கேனை எடுத்து வந்து, தனது மனைவி செய்யது அலி பாத்திமா, மகள் பர்வீன், மகன் பாருக், தாயார் சிக்கந்தர் பீவி ஆகிய நான்கு பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

சிவகாசி அரசு மருத்துவமனை

திடீரென ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர். மேலும், நான்கு பேர் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தபோது, அக்பர் அலியின் மீதும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் ஐந்து பேரும் கடுமையான தீக்காயங்களுடன் துடித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினர் உடனடியாகத் தீயை அணைத்து, படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம், ஐந்து பேரின் உடல்நிலையும் கவலைக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சிவகாசி

தீக்காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து, அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அல்லது பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறின் சரியான காரணம் குறித்தும், சம்பவம் நடந்த விதம் குறித்தும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்பர் அலியின் உடல்நிலை குணமடைந்தவுடன் அவரிடம் மேலதிக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க