செய்திகள் :

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

post image

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலைசெய்ய முயன்ற சம்பவத்தில், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்தவர் அக்பர் அலி (50). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (35). இவர்களுக்கு பர்வீன் (18), பாருக் (13) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் அக்பர் அலியின் தாயார் சிக்கந்தர் பீவி (60) வசித்து வருகிறார். நீண்டகாலமாக இவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அக்பர் அலி திடீரென பெட்ரோல் கேனை எடுத்து வந்து, தனது மனைவி செய்யது அலி பாத்திமா, மகள் பர்வீன், மகன் பாருக், தாயார் சிக்கந்தர் பீவி ஆகிய நான்கு பேர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

சிவகாசி அரசு மருத்துவமனை

திடீரென ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர். மேலும், நான்கு பேர் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தபோது, அக்பர் அலியின் மீதும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் ஐந்து பேரும் கடுமையான தீக்காயங்களுடன் துடித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சிவகாசி தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினர் உடனடியாகத் தீயை அணைத்து, படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம், ஐந்து பேரின் உடல்நிலையும் கவலைக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சிவகாசி

தீக்காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து, அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அல்லது பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறின் சரியான காரணம் குறித்தும், சம்பவம் நடந்த விதம் குறித்தும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்பர் அலியின் உடல்நிலை குணமடைந்தவுடன் அவரிடம் மேலதிக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகி... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு... மேலும் பார்க்க

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் த... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலன் துணையோடு கணவனை கொன்று, உடலை வெட்டி வீசிய மனைவி - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தெளசி என்ற இடத்தில் பேக் ஒன்று சாலையோரம் கிடந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒருவரின் உடல் இருந்தது. அதில் கை, கால் மற்றும் தலை இல்லாமல் இ... மேலும் பார்க்க