செய்திகள் :

சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம் லட்சுமி வெடி பட்டாசு போன்ற பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான காகிதங்களைத் தயாரிக்கும் காகித கட்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் அருகே ஆட்களின் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் காளியம்மன் கோயில் பழைய தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே சில அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை கென்னடி கண்ணன் அடிக்கடிக் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கென்னடி கண்ணன்

இதனால் தொடர்ச்சியாகப் பிரச்னையிருந்து வந்த நிலையில் கென்னடி கண்ணன் தனது நிறுவனத்தைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் கென்னடி கண்ணனின் நிறுவனத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கென்னடி கண்ணனும், அவரது மனைவி மஞ்சுளாவும் தங்களது நிறுவனத்தினுள் அமர்ந்து பேப்பர்களை தரம் பிரிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டப் பகலில் நிறுவனத்தின் பின் பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

சிவகாசி அரசு மருத்துவமனை

இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கென்னடி கண்ணன் அணிந்திருந்த மேல் சட்டை தீப்பிடித்து எரிந்து அவரது முதுகில் தீக்காயம் ஏற்பட்டதுடன், வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல்களிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. காயமடைந்த கென்னடி கண்ணன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி டிஎஸ்பி அனில் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சிவகாசி வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க