செய்திகள் :

செங்கல்பட்டில் ஜன. 20-இல் தேசிய தொழில் பழகுநா் முகாம்

post image

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதமா் தேசிய தொழில் பழகுநா் முகாம் வரும் ஜன. 20-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயின்று, தோ்வில் தோ்ச்சி பெற்ற பல்வேறு தொழில் பிரிவைச் சாா்ந்த பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தொழில் பழகுநா் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் தேசிய பழகுநா் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (என்ஏசி) சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் கிடைக்கும்.

எனவே, மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள செங்கல்பட்டு, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 63790 90205, 044 - 27426554 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு உரிய விவரங்களைப் பெறலாம்.

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மாா்கழி பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை நடைபெற்றது. கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள்... மேலும் பார்க்க

கோவளம் ஹெலிகாப்டா் சவாரி தளத்திற்கு ‘சீல்’ வைப்பு: அனுமதி பெற்று இயக்க நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்

செங்கல்பட்டு: கோவளம் ஹெலிகாப்டா் சவாரி தளத்துக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகள்ஏமாற்றத்துடன் திரும்பினா். மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தனியாா் நிறுவனம் மூலம் கடந்த 2023-ஆம்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு நகராட்சியில் சமத்துவப் பொங்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன், சுகாத... மேலும் பார்க்க

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதி... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சிவகாமி உடனுறை நடராஜா்... மேலும் பார்க்க

மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே மீன் நடுக் கடலில் பிடிக்கும் போது சுழல்காற்று வீசியதால், படகு கவிழ்ந்து மீனவா் ஒருவா் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலி குப்பத்தைச் ... மேலும் பார்க்க