செய்திகள் :

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

post image

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும் வந்தது. உடனே சீனிவாசனின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், காவல் கட்டுப்பாட்டறைக்கும் சீனிவாசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சீனிவாசன் விரைந்து வந்தார். அதோடு போலீஸாரும் அங்கு வந்து விசாரித்தனர். பொதுமக்களின் உதவியோடு சீனிவாசனின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது அங்கு அமுதா, தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

கொலை
கொலை

அதைப்பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்ததோடு கதறி அழுதார். பின்னர் போலீஸார், அமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை யாரோ கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனால் கொலை வழக்கு பதிந்த போலீஸார், அமுதாவை கொலை செய்து தீ வைத்து எரித்தது யார் என விசாரித்தனர். போலீஸாரின் சந்தேக பார்வை, அண்ணாநகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர் மீது விழுந்தது. இவர் சீனிவாசனின் டீக்கடையில் வேலைப்பார்த்து வருவதும் தெரியவந்தது. அமுதா கொலை குறித்து சீனிவாசனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று மதியம் சீனிவாசன், கடையிலிருந்து வீட்டுக்கு சாப்பிடச் சென்றிருக்கிறார். அப்போது கடையில் அமுதா இருந்திருக்கிறார். சீனிவாசன், கடைக்கு வந்த பிறகு மாலையில் அமுதா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து சாந்தகுமாரும் வெளியில் சென்றார். அமுதா வீட்டிலிருந்தபோது அங்கு வந்த சாந்தகுமார், அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அமுதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கிறார். சாந்தகுமாரிடமிருந்து அமுதாவின் தங்க நகைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். நகைக்காக அமுதாவை கொலை செய்ததாக சாந்தகுமார் சொல்கிறார். அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு சாந்தகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி ... மேலும் பார்க்க