கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந...
" 'ஜெய் பீம்' படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது, ஆனால்.!"- லிஜோமோல் ஷேரிங்
தமிழில் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் 'செங்கேணி' கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த லிஜோ மோல் நடிப்பில் 'உன்மதம்' என்ற மலையாள படம் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படம் தொடர்பாக 'Cinema Express' ஊடகத்திற்கு லிஜோ மோல் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பட வாய்ப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியிருக்கும் லிஜோ மோல், "ஒவ்வொரு திரைப்படமும் அதற்குப் பிறகு வரும் வாய்ப்புகளின் தன்மையை மாற்றுகிறது. ஒரு படத்தில் நம் நடிப்பைப் பார்த்துவிட்டு, அதே போன்ற கதாபாத்திரங்களோடு நம்மை அணுகுகிறார்கள்.

'ஜெய் பீம்' திரைப்படம் நிச்சயமாக எனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட அதிகமான பாராட்டுகளை அது எனக்குப் பெற்றுத் தந்ததுடன், அதே போன்ற பல வாய்ப்புகளையும் கொண்டு வந்தது.
ஆனால், நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். 'பொன்மான்' திரைப்படத்தில் 'ஸ்டெஃபி கிராஃப்' கதாபாத்திரமும் பல பரிமாணங்களைக் கொண்டது தான், ஆனால் 'ஜெய் பீம்' கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
ஒவ்வொரு நடிகரும் தங்கள் புதிய கதாபாத்திரம் முந்தையதை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். 'உன்மதம்' படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஆழமான உணர்ச்சிப் பூர்வமான பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.

நான் கடைசியாக உண்மையிலேயே ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்தது 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்குப் பிறகு வந்த 'கட்டப்பனையில ரித்விக் ரோஷன்' படத்தில் தான்.
இப்போது யாராவது எனக்கு மீண்டும் 'சௌமியா' அல்லது 'ஸ்டெஃபி கிராஃப்' போன்ற கதாபாத்திரங்களைச் செய்யக் கொடுத்தால், நான் செய்ய மாட்டேன். ஜாலியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

















