செய்திகள் :

டி.கே. பிரபு: காங்கிரஸ் பாரம்பர்யம்; இளம் ‘டாக்டர்’ - காரைக்குடியில் இருந்து `முதல்' அமைச்சர்!

post image

சிவகங்கை சீமையின் ‘செட்டிநாடு’ என அழைக்கப்படும் காரைக்குடி தொகுதியில் இப்போது கொண்டாட்ட வாணவேடிக்கைகள் அதிர்கின்றன.

காரணம், 1952-ல் தொடங்கி இன்றுவரை பல தேர்தல்களைக் கண்ட காரைக்குடிக்கு, முதல்முறையாக ஒரு ‘அமைச்சர்’ அந்தஸ்து கிடைத்திருக்கிறது!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார் 42 வயது பல் மருத்துவர் டி.கே.பிரபு.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு தொகுதிகள் இருந்தாலும், காரைக்குடிக்கு மட்டும் இத்தனை காலமும் ‘அமைச்சர் யோகம்’ எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

டி.கே.பிரபு தேவகோட்டை அருகே உள்ள இருமதியைச் சேர்ந்தவர். காரைக்குடியில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது தந்தை துரை. கருணாநிதி முன்னாள் ராணுவ வீரர். காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம். தாயார் சரஸ்வதி தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர். மனைவி, ஒரு மகன், ஒரு மகள். குடும்பமே அரசியலில் ஊறியிருந்தாலும், பிரபுவுக்கு இது ஒரு ‘மெகா ஜாக்பாட்’ தான்!

தற்போது தவெக சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் பிரபு, இள ரத்தமாக அமைச்சரவைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பு சிவகங்கை தொகுதியிலிருந்து ராஜகண்ணப்பன், பாஸ்கரன் போன்றவர்களும், திருப்பத்தூர் தொகுதியிலிருந்து மாதவன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன் போன்றவர்களும் அமைச்சர்களாக கோலோச்சியுள்ளனர்.

ஆனால், 1952 முதல் 2021 வரை 16 தேர்தல்களைச் சந்தித்த காரைக்குடி தொகுதிக்கு, ஒரு அமைச்சரைக்கூடத் தரவில்லை என்ற ஏக்கம் தொகுதி மக்களிடம் நீண்டகாலமாக இருந்தது.

"இத்தனை வருஷ ஏக்கத்தைப் பிரபு தீர்த்து வச்சுட்டாரு!" என செட்டிநாடு ஏரியா முழுக்க இப்போது ஒரே பேச்சாகக் கிடக்கிறது.

அமைச்சராக முடிசூடியிருக்கும் இந்த இளம் ‘டாக்டர்’, காரைக்குடிக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை ஹெல்த்தியாக கொண்டு வருவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

`சிங்கப்பூர் ஏன் உலகில் முன்னோடி நாடு?' | இயக்குநர் சீனு ராமசாமி

நம் தேசத்தில் நாம் 'லஞ்சம்' (Bribery) பற்றி அதிகம் பேசுகிறோம். லஞ்சம் என்பது ஒரு தனிமனிதனின் ஒழுக்கச் சிதைவு; அது திருட்டுத்தனமாக இருட்டில் கைமாறும் ஒரு அழுக்கு நோட்டைப் போன்றது. அதைச் சட்டத்தால் தண்ட... மேலும் பார்க்க

ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் - `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட க... மேலும் பார்க்க

‘விஜய் திமுக-விடம் கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறார்!’ – பாஜக எஸ்.ஆர். சேகர்

விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது சர்ச்சையானது. இதனை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இது தொடர்பான ஒரு விளக்கத்தை வழங்கினார். இந்நிலையில் பா.ஜ.க. மாநிலப் பொ... மேலும் பார்க்க

தனித்தனியாக வந்த எடப்பாடி, வேலுமணி; பதவியேற்காத சி.வி சண்முகம்! - சட்டமன்றத்தில் அதிமுக கடாமுடா!

முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இந்த நிகழ்வுக்கு அதிமுகவினர் டீம் டீமாக பிரிந்து வந்து தங்களு... மேலும் பார்க்க

பெட்ரோல் எண்ணெய் பயன்பாடு: `இதுதான் தோல்வி அரசுக்கான அடையாளம்'- பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டு... மேலும் பார்க்க