செய்திகள் :

"டீல் பேசினேனா? இந்த எண்ணங்கள் எழும் நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது"- சோனம் வாங்சுக் வருத்தம்

post image

நீட், க்யூட் வினாத்தாள் கசிவு, இந்தக் கசிவுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்‌ இருந்தார்.

தொடர் உண்ணாவிரதத்தால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

விமர்சனங்கள்...

நேற்று முன்தினம் (ஜூலை 24), சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜித்தேந்திர சிங்.

இதையடுத்து 26-வது நாளில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக். ஆனால், இவர் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்‌ என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சோனம் வாங்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது...

மத்திய அரசுடன்‌ டீல்?

"லடாக்கின் உறைபனியிலும், டெல்லியின் சுட்டெரிக்கும் வெயிலிலும் அமர்ந்து போராடிய பிறகு... என் உண்ணாவிரதம் எவ்வளவு தூய்மையானது என்பதற்கு நான் யாரிடமாவது சான்றிதழ் வாங்க வேண்டுமா என்ன?

ஏன் அவர்களிடம் போய் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டீர்கள்? அவர்களுக்கு இடையே என்ன டீல் நடந்தது? என்ன பேரம் பேசப்பட்டது?' என்றெல்லாம் மக்கள் எனக்கு போன் செய்தும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் கேட்கிறார்கள்.

எனக்கு ஏதாவது டீல் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், நான் ஏன் 26 நாட்கள் பட்டினியாகக் கிடக்க வேண்டும்? ஒரு ஏசி அறையில் சொகுசாக உட்கார்ந்தே டீல் பேசியிருக்கலாமே; டெல்லி வீதியில் வந்து இந்த வெயிலில் காய வேண்டிய அவசியமே இல்லையே.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

வெட்கமாக இருக்கிறது

இதுபோன்ற எண்ணங்கள் எழும் ஒரு நாட்டினை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. செவ்வாய் இரவு, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டாவும், ஜிதேந்திர சிங்கும் வந்தார்கள். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால், நிபந்தனைகள் இன்றி முடிக்க முடியாது என்று நான் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்.

எனது கோரிக்கைகள்:

> கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் வேண்டும்;

> கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்;

> தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

> இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

> மாணவர் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, FIR-ஓ பதிவு செய்யக் கூடாது.

சில கோரிக்கைகளுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர், மற்றவற்றைச் பரிசீலிப்பதாகக் கூறினர்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யோசிக்கிறோம்

அமைச்சர்களின் கைகளால் உண்ணாவிரதத்தை முடிக்க எனக்கு விருப்பமில்லை. பல்வேறு கட்சி எம்.பி.க்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் லடாக் தலைவர்கள் முன்னிலையில்தான் முடிக்க விரும்பினேன்.

ஆனால் அடுத்த நாள், எம்.பி.க்களும் மாணவர் தலைவர்களும் கேட் அருகிலேயே பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நான் சுதந்திரமான குடிமகன் என நீதிமன்றம் அறிவித்த பிறகும், மக்களை என்னைச் சந்திக்க விடாமல் தடுத்ததற்காக நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யோசித்து வருகிறோம்.

மாணவர்கள் மீதான சட்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறும் நிபந்தனைக்கு அரசுத் தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எனக்கு வலிக்கிறது

ஆனால், மாணவர்களைப் பல ஆண்டுகள் நீதிமன்ற அலைச்சல்கள், சிறை அல்லது NSA (தேசிய பாதுகாப்புச் சட்டம்) போன்ற கடுமையான சட்டங்களிலிருந்து பாதுகாப்பதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் இல்லாமல் நான் உண்ணாவிரதத்தை முடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இறுதியாக, 23-ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். மக்கள் கொந்தளிப்பாலும் அரசின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தாலும் கல்வி அமைச்சரின் ராஜினாமா எப்படியும் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே, அமைச்சரின் ராஜினாமாவை விட மாணவர்களின் பாதுகாப்பே எனக்கு முதன்மையானதாக இருந்தது.

என்னால் இன்னும் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை, அதற்குள் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேட்பது வலிக்கிறது". என்றிருக்கிறார்.

`மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்' - பாஜக ஆளும் அஸ்ஸாம் மாணவர் போராட்டத்தில் அமைச்சரின் மகள்

டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இன்று அவர்களுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ப... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரவ்னீத் சிங் பிட்டு! - அமைச்சரவை விரைவில் மாற்றம்?

ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ம் த... மேலும் பார்க்க

1997 வினாத்தாள் கசிவு: `அன்று போராளி, இன்று.?' - தர்மேந்திர பிரதான் கடந்து வந்த பாதை!

நீட் வினாத்தாள் கசிவு, அரசு தேர்வுகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய கல்வித்துறை மீது கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி... மேலும் பார்க்க

"வெற்றிமாறன் சாரும் ஜோக்கரா?" - பாலன் இல்லத்தில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றம்! பேசியது என்ன?

நேற்று சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நடிகை சனம் ஷெட்டி பேசினார்.அங்கே அவர், "இது மாணவர்களுக்கான போராட்டம்.இந்த மேடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த நி... மேலும் பார்க்க

"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" - மம்தா பானர்ஜி

haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்... "நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்ட... மேலும் பார்க்க