செய்திகள் :

ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!

post image

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிப்போர் நடத்திவந்தார். இதனால் உலக நாடுகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் வெளிப்பாடாக அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ``மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து உலக நாடுகள் மீதான வரி குறைக்கப்படுமா அல்லது வேறு சட்டங்கள் மூலம் வரி விதிக்கும் வழமையை அதிபர் ட்ரம்ப் தொடரப்போகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

இதற்கிடையில், சமீபத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப், ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். இது முன்பு இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

இந்தியா அமெரிக்காவை அதிக வரி விதித்து அமெரிக்காவை சுரண்டியது என்ற என் கருத்திலிருந்து, இப்போது அமெரிக்காவுக்கு சாதகமாகியிருக்கிறது. நாங்கள் ஒரு சிறிய திருப்பத்தை செய்தோம். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களைவிட மிகவும் புத்திசாலி." என்றார்.

1957: `திரைக்கவர்ச்சி' என திமுகவை விமர்சித்த காங்., - திராவிட இயக்கத்தின் அரசியல் உதயம்! | ஆடுபுலி 6

1957 அரசியல் களம்அரசியல் ஆடுபுலி 06`தமிழ்நாட்டிற்கும், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி' என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.`நடிகர்கள் பின்னால் திரளும் கூட்... மேலும் பார்க்க

பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை; கேரள அரசியலில் புதுப் புயல்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு ... மேலும் பார்க்க

ஹாட்பாக்ஸில் சுடசுட மட்டன் பிரியாணி; பிரமாண்ட செட்! - திமுக வாக்குசாவடி கூட்டத்தில் எனென்ன ஸ்பெஷல்?

மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமர... மேலும் பார்க்க