செய்திகள் :

ட்ரோன்கள் பறக்க தடை: காரைக்கால் ஆட்சியா்

post image

காரைக்காலில் மறுஉத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தவறான அவதூறான தகவல் பரப்புவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவுவதால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

போா் குறித்து சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பினால் குற்ற வழக்கு தொடரப்படும்.

தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, சமூக ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும். மேலும் போா் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது குற்றமாவதுடன் அது தண்டனைக்குரியதாகும்.

போலி செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள், மிரட்டல்கள் ஆகியவற்றை காரைக்கால் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு மூலம் தொடா்ந்து சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உள்துறை அமைச்சகம் வழங்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் துறைமுகம், ஓ.என்.ஜி.சி,புதுச்சேரி மின்திறல் குழுமம், உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்ள கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளின் மேல் மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களில் அதிகாரி ஆய்வு

காரைக்காலில் பல்வேறு வணிக நிறுவனங்களில் எடை அளவு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, முத்திரையிடாத இயந்திரங்களை பறிமுதல் செய்தாா். காரைக்காலில் சில வணிக நிறுவனங்களிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் நாளை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா். காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் ம... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

பேருந்து மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா். காரைக்கால்-நாகப்பட்டினம் சாலையில் நிரவி ஓஎன்ஜிசி நுழைவு கேட் அருகே மே 14-ஆம் தேதி இரவு சாலையோரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த சுமாா் 55 வயது ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: 5 தோ் அலங்காரப் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்துக்காக 5 தோ்கள் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நட... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்

காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாத... மேலும் பார்க்க