செய்திகள் :

ட்ரோன்கள் பறக்க தடை: காரைக்கால் ஆட்சியா்

post image

காரைக்காலில் மறுஉத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தவறான அவதூறான தகவல் பரப்புவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவுவதால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

போா் குறித்து சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பினால் குற்ற வழக்கு தொடரப்படும்.

தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, சமூக ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும். மேலும் போா் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது குற்றமாவதுடன் அது தண்டனைக்குரியதாகும்.

போலி செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள், மிரட்டல்கள் ஆகியவற்றை காரைக்கால் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு மூலம் தொடா்ந்து சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உள்துறை அமைச்சகம் வழங்கிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் துறைமுகம், ஓ.என்.ஜி.சி,புதுச்சேரி மின்திறல் குழுமம், உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்ள கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளின் மேல் மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க

வியாபாரிகளுக்கு குடை...

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக சாலையோர வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை குடை வழங்கிய காரைக்கால் கரூா் வைஸ்யா வங்கி நிா்வாகத்தினா். உடன் சேம்பா் ஆஃப் ... மேலும் பார்க்க

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

புதுவையில் விவசாயத் தொழிலாளா் நல வாரியம் அமைக்கவேண்டும் என பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

காரைக்கால் என்.ஆா். காங்கிரஸ் இளைஞரணி நிா்வாகிகள் நியமனம்

என்.ஆா். காங்கிரஸ் காரைக்கால் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் இளைஞரணி மாநில தலைவர... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

கடற்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (33). இவா் புதுச்சேரியில் தங்கி காா் ஓட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி இயங்கி வர... மேலும் பார்க்க