செய்திகள் :

செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டில் அவரது தம்பிக்கு சம்மன் வழங்கிய போலீஸார்! - கரூர் பரபரப்பு

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் கரூரில் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை சம்மன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.d.dixith

இதையடுத்து, கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு அவரது வழக்கறிஞர்கள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சம்மனுடன் வந்தனர்.

அப்போது, அங்கு இருந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் வருகைக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். சம்மன் வழங்க வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்ற போலீஸார் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களான வேலுச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் சம்மனை வாசித்துக் காட்டி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் வரும் திங்கட்கிழமை காலை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

samman

இதையடுத்து, சம்மனை பெற்றுக் கொண்ட பெற்றோர் அதில் கையெழுத்திட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் வழங்கப்பட்ட சம்பவத்தால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"ஜாமீன் வேண்டாம்; நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்"- போக்ஸோ வழக்கில் இளைஞர் விடுதலையான பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திக். சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கடந்த 2024- ம்‌ ஆண்டு இவர் மீது புகார் கொடு... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய... மேலும் பார்க்க

வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கட்டட மேஸ்திரியை அடித்து உதைத்த ஊர் மக்கள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 7 வயது சிறுமி, தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிரே உள்ள வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த அரவட்லா மலை ... மேலும் பார்க்க

பாயசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்... மேலும் பார்க்க

சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்... மேலும் பார்க்க

காரில் லேசாக உரசிய பைக்; போலீஸ்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த பைக் கும்பல்; பின்னணி என்ன?

நாக்பூரில் பைக்குகளில் வந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரின் காரை வழிமறித்து, அவரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்... மேலும் பார்க்க