செய்திகள் :

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ

post image

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சமூக ஊடகங்களில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு இது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பத்ரிநாத் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மற்றும் ரொக்க பணத்தில் கையாடல் செய்வது மற்றும் முறைகேடுகள் நடப்பதாக செய்தி வெளியானது.

அதோடு 'பைரவ் சேனா' என்ற இந்து அமைப்பின் நிறுவனத் தலைவரான சந்தீப் கத்ரி என்பவரும் கோயில் உண்டியல் மற்றும் நன்கொடையில் முறைகேடு நடப்பதாக கோயில் கமிட்டிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

கோயில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் சிங் ரங்கட்டிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், காணிக்கை அறையில் நடந்த துல்லியமான முறைகேடுகளைக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட சில ஊழியர்களைக் குறிவைத்துக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பத்ரிநாத் தாமில் காணிக்கை எண்ணும் பணியின் போது திருட்டு நடந்ததாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கடிதத்தை அனுப்பியவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைவருடைய தனிச் செயலாளர் என்று கூறப்படும் ஒரு நபர், பக்தர்களின் காணிக்கைப் பணத்தைத் திருடியதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த முழு விவகாரத்திலும் எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவர் ஹேமந்த் திவேதி இது குறித்து கூறுகையில், இந்த விவகாரத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி, உண்மைகளின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது என்றார். இந்த விசாரணைக்குப் பிறகு ஏதேனும் ஊழியர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், விதிகளின்படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

சமூக ஊடகப் புகார்களைத் தானாக முன்வந்து கவனித்த கோயில் குழு, லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக அணுகுவதாகவும், 24 மணி நேரத்திற்குள் அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகார்கள் குறித்து கோயில் நிர்வாகம் மிகுந்த தீவிரத்துடன் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்கள்

கோயில் கமிட்டி இது குறித்து கூறுகையில், ''பத்ரிநாத் தாமில் பக்தர்களின் காணிக்கைகளை எண்ணுவதற்கு முறையான மற்றும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வங்கி ஊழியர்கள், கோயில் கமிட்டியினர், அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்படுகிறது'' என்றது.

அடுத்தடுத்து வரும் உண்டியல் புகார் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது

வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கட்டட மேஸ்திரியை அடித்து உதைத்த ஊர் மக்கள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 7 வயது சிறுமி, தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிரே உள்ள வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த அரவட்லா மலை ... மேலும் பார்க்க

பாயசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்... மேலும் பார்க்க

சென்னை: சிறுமி கடத்தலைத் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்; நேரில் அழைத்து பாராட்டிய DGP!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ். இவர் திருச்சியில் விவசாய வேலை முடித்துவிட்டு, தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்புவதற்காகக் கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்... மேலும் பார்க்க

காரில் லேசாக உரசிய பைக்; போலீஸ்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த பைக் கும்பல்; பின்னணி என்ன?

நாக்பூரில் பைக்குகளில் வந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரின் காரை வழிமறித்து, அவரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்... மேலும் பார்க்க

திருவிழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த நடனக் கலைஞர் உயிரிழப்பு; ரசிகர்கள் சோகம்

கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா. இவர் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்... மேலும் பார்க்க

'பணி நேரத்தில் மதுபோதை; அலுவலகத்தில் படுத்துறங்கிய அவலம்!' - துறையூர் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர், பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் ... மேலும் பார்க்க