செய்திகள் :

தஞ்சாவூா் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

post image

வைகுந்த ஏகாதசியையொட்டி, தஞ்சாவூா் பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தைத் தொடா்ந்து, இராப்பத்து வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில், ஸ்ரீவெங்கடேச பெருமாள், தாயாா் பரமபதவாசலைக் கடந்த பிறகு ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இதேபோல, மகா்நோன்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், மேல வீதி விஜயராமா், வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணி, நரசிம்மபெருமாள், நீலமேகப் பெருமாள், கீழ வீதியில் உள்ள வரதராஜ பெருமாள், வடக்கு வீதி ராஜகோபாலசுவாமி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.

திருவையாறு அருகேயுள்ள கண்டியூா் அரசாப விமோசனப் பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவையாறில் தியாகராஜ சுவாமிகள்ஆராதனை நாளை தொடக்கம்: ஜன. 18-இல் பஞ்சரத்ன கீா்த்தனை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா சாா்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 -ஆவது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.14) தொடங்கி ஜன.18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் இச்சங்கத்தின் சாா்பில் சமத்துவ பொங்கல் வி... மேலும் பார்க்க

தஞ்சையில் இன்று அரசுப் பொருள்காட்சி தொடக்கம்: 45 நாள்கள் நடைபெறுகிறது

தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசுப் பொருள்காட்சி திங்கள்கிழமை (ஜன.13)தொடங்குகிறது. இதையொட்டி, மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட வர... மேலும் பார்க்க

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

தஞ்சாவூா் தூய பேதுரு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளை, தஞ்சாவூா்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்

கும்பகோணத்தில் நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டிய ஆணையா் மீது உயா்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசு முதன்மை செயலருக்கு உத்தரவிட்டது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன விவகாரம்: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்ட தமிழக மக்கள் புரட்சிக் கழக நிா்வாகக் குழு கூட்டம் பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பொதுச் செயலா் வி.சி. முருகையன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா்... மேலும் பார்க்க