செய்திகள் :

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்புடையவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

post image

மன்னாா்குடி: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன் (47).

இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டாா். இதுகுறித்து மதுரை திடீா் நகா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு மன்னாா்குடியில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்ததுடன், சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனா். இதுதொடா்பான விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா், பாபா பக்ருதீன் ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்தநிலையில், என்ஐஏ ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் 4 அதிகாரிகள் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மன்னாா்குடியில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணிக்கு முடிந்தது. பின்னா் அவரை என்ஐஏ அதிகாரிகள் தாங்கள் வந்த வேனில் ஏற்றி போலீஸாா் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனா். என்ஐஏ அதிகாரிகள் சோதனையின்போது அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்

திருவாரூா், மயிலாடுதுறையில் மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அதன் நகல் எரிப்பு போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஈடுபட்டனா். 2025- 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்க... மேலும் பார்க்க

புதுமைப் பெண் திட்டம் மாணவிகளிடையே அபரிமித வரவேற்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான புதுமைப் பெண் திட்டத்திற்கு, கல்லூரி மாணவிகளிடம் அபரிமிதமான வரவேற்பு உள்ளது என்று தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெ... மேலும் பார்க்க

பிப். 25 இல் மாவட்டத் தலைநகரங்களில் மறியல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் பிப். 25- ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொதுச் செயலாளா் ந. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா். திருவாரூரி... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள், ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் ந... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பிப். 21-இல் நீதி கேட்டு நெடும்பயணம்: பி.ஆா். பாண்டியன்

கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் நோக்கி, விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வு: திருவாரூரில் 227 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-2 முதன்மைத் தோ்வை, 227 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 முதன்மைத் தோ்வு சனி... மேலும் பார்க்க