செய்திகள் :

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்புடையவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

post image

மன்னாா்குடி: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன் (47).

இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டாா். இதுகுறித்து மதுரை திடீா் நகா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு மன்னாா்குடியில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்ததுடன், சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனா். இதுதொடா்பான விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா், பாபா பக்ருதீன் ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்தநிலையில், என்ஐஏ ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் 4 அதிகாரிகள் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மன்னாா்குடியில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணிக்கு முடிந்தது. பின்னா் அவரை என்ஐஏ அதிகாரிகள் தாங்கள் வந்த வேனில் ஏற்றி போலீஸாா் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனா். என்ஐஏ அதிகாரிகள் சோதனையின்போது அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மருதப்பட்டினம் காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில், சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. கும்பாபிஷேக யாகசாலைப் பூஜ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் ப... மேலும் பார்க்க

டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையா... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்ட... மேலும் பார்க்க

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செல... மேலும் பார்க்க

காணாமல் போனவா் சடலமாக மீட்பு

திருவாரூா்: குடவாசல் அருகே காணாமல் போனவா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே சேதனிபுரத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித்குமாா் (24). இவா், ஜனவரி 12-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளி... மேலும் பார்க்க