செய்திகள் :

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

post image

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சுந்தர் சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்!

சுந்தர் சி
சுந்தர் சி

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக, அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

மறைந்த அவரது தந்தை திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஆசியுடனும், 94 வயதாகும் அவரது தாயார் திருமதி. தெய்வானை சிதம்பரம் பிள்ளை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நல்வாழ்த்துகளுடனும் இந்தப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

திரு. ஏ.சி. சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலில், கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆதரவோடு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எப்போதும் போல மக்களின் மனிதனாக இருப்பார்.

குஷ்பு
குஷ்பு

கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களைத் தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வரும் அவர், தன்னை உருவாக்கிய மக்களுக்குத் தனது சிறந்த சேவையை ஆற்றுவார் என்பதில், அவரது மனைவி என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

`செயல்பாடு அப்படி.!' அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் இல்லை - பின்னணியில் மூன்று காரணங்கள்!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க, பத்மநாபபுரம் என்ற ஒரே தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தொகுதி இந்தமுறை கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்க... மேலும் பார்க்க

கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! - வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஸ்டாலின் - திமுகஇந்நிலையில் த... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை? - அறிவித்தது திமுக!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 30 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஸ்டாலின் - திமுகஇந்நிலையில் த... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் விஜய்! - தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு; என்ன புகார் கொடுத்தார்?

தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். More details will be added..! மேலும் பார்க்க

`காங்கிரஸ் தொகுதியை கைப்பற்றி கம்யூனிஸ்ட்; தேமுதிக-வை கூல் செய்த முதல்வர்!' - பைனல் ஆன பட்டியல்!

காங்கிரஸ் கைவசம் உள்ள ஒரு தொகுதியை கம்யூனிஸ்ட் கைப்பற்றியுள்ளது. தே.மு.தி.கவுடனும் தொகுதியை இறுதி செய்துவிட்டது தி.மு.க தலைமை. இதனால், தி.மு.க கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியல் இன்று மாலை அ... மேலும் பார்க்க

'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' - பிரசாரத்தில் ஆவேசமான சுரேஷ் கோபி

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி பிரசாரம் மேற்கொண்டார். மலம்புழ... மேலும் பார்க்க