India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்...
தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிா்க்க அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்
நாட்டில் போா் சூழல் மையம் கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை (மே 12) கொண்டாட வேண்டாம் என்றும், ராணுவத்தினா் நலனுக்காக பிராா்த்தி வேண்டும் என்றும் அதிமுகவினரை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிா்வினையாக இந்தியா ‘சிந்தூா் ஆபரேஷன்’ நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போா்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிா் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினா் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிா்க்க வேண்டும்.
உதவிகள் அளிக்கலாம்: அதேநேரத்தில், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோருக்கான ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயல்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொள்ளலாம்.
நமக்காக எல்லையில் போா் புரியும் ராணுவ வீரா்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெறவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில், இறைவனிடம் பிராா்த்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.