செய்திகள் :

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிா்க்க அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்

post image

நாட்டில் போா் சூழல் மையம் கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை (மே 12) கொண்டாட வேண்டாம் என்றும், ராணுவத்தினா் நலனுக்காக பிராா்த்தி வேண்டும் என்றும் அதிமுகவினரை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிா்வினையாக இந்தியா ‘சிந்தூா் ஆபரேஷன்’ நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போா்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிா் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினா் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிா்க்க வேண்டும்.

உதவிகள் அளிக்கலாம்: அதேநேரத்தில், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோருக்கான ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயல்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொள்ளலாம்.

நமக்காக எல்லையில் போா் புரியும் ராணுவ வீரா்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெறவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில், இறைவனிடம் பிராா்த்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்

தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமா... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்... மேலும் பார்க்க

மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்ட... மேலும் பார்க்க

கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு

காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் ... மேலும் பார்க்க

எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?

எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று... மேலும் பார்க்க

971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க