செய்திகள் :

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

post image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ் விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா். இந் நிகழ்ச்சியில், ஜமா அத்துல் உலமா சபை மாவட்டத் தலைவா் மௌலானா மௌலவி எப். முஹம்மது முனீா் ஹஜ்ரத் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி தாளாளா் அ.கா. காஜா நஜுமுதின், ரோவா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கி. வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். சிவசுப்ரமணியம், திருச்சிராப்பள்ளி புனித வளனாா் கல்வி நிறுவனங்களின் முனைவா் பவுல்ராஜ் மைக்கேல் சே.ச, பெரம்பலூா் மறைவட்ட பங்குத்தந்தை எ. சுவைக்கின் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

விழாவில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் தலைவா்கள், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா், புல முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் உ... மேலும் பார்க்க

வெளிவரத்து, விளைச்சல் அதிகம்: தக்காளி விலை வீழ்ச்சி

தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்! -பெ. சண்முகம்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். பெரம்பலூரில் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

பெரம்பலூா் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்குச் ... மேலும் பார்க்க