செய்திகள் :

``தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல்" - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

post image

தமிழக சட்டமன்றத்தில் மத அரசியல் அரங்கேறுவதாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில்,`` தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் திரு. ஜே.சி.டி பிராகர் அவர்கள், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார். இது முதல்வர் திரு. முதல்வர் விஜய் அவர்களுக்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது.

JCD Prabhakar
சபாநாயகர் JCD பிரபாகர்

இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். அமைச்சர் திரு. மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார். அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனியாவது சபாநாயகர் அவர்களும் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்! - எதிர்ப்புக்கு பணிந்த டி.கே.சிவகுமார்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்தக்கட்சியினரின் நெருக்கடியால் பொறுப்பேற்ற 25 நாட்களில் அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்த சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே.சி... மேலும் பார்க்க

``ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர நினைக்கிறதா இந்த அரசு?" - தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக விமர்சனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, த.வெ.க எம்.எல்.ஏ, ``அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் இளைஞர்களை சீரழிக்கும் இடம். ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு செலவிட்ட ரூ.50 கோடியை மூடப்பட... மேலும் பார்க்க

``அடுத்தப் பிரதமர் யார்?" - கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்க... மேலும் பார்க்க

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர்; சுத்தப்படுத்த களமிறக்கப்பட்ட நவீன கருவி | Album

திருநெல்வேலி:தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்தப்படுத்த களமிறக்கப்பட்ட நவீன டெமோ கருவி.! மேலும் பார்க்க

சட்டமன்றம்: ``முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வே... மேலும் பார்க்க