செய்திகள் :

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

post image

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மையத்தின் உற்பத்திப் பிரிவு துணைப் பொது மேலாளராக பதவி வகித்து வரும் சாரதா என்பவர் கடந்த சில வருடங்களாகவே ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நெய் , வெண்ணையை திருடிச் சென்று வெளியில் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சாரதாவின் அலுவலக அறைக்குள் ஆவின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது , சாரதா பயன்படுத்தி வந்த மேஜைக்குள் 40 கிலோ நெய் டப்பாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

நெய் டப்பாவுடன் சாரதா

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி ஆவின் நிறுவனம் மீதான பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் முதற்கட்டமாக சாரதாவை பணியிடை நீக்கம்‌ செய்து உத்தரவிட்டுள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆவின் நிறுவன துணை பொது மேலாளர் வருடக்கணக்கில் நெய், வெண்ணெய் போன்றவற்றை திருடிச் சென்று வெளியில் விற்பனை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சாரதா மீது முறையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகு... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுனீஸ்வரன். தப்பாட்டக் கலைஞரான இவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தது, அச்சக அதிபர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, வீடு புகுந்து ப... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும்... மேலும் பார்க்க

மதுரை: 'இரட்டிப்பு லாபம் பெறலாம்' - 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல்

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய்... மேலும் பார்க்க

சென்னையில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஆந்திராவில் மீட்பு - தாய், டாக்டர் சிக்கிய பகீர் பின்னணி!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி பவித்ரா. இவருக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ரௌடியான `குள்ள' கணேஷ், வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறைய... மேலும் பார்க்க

மதுரை: ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி; உறவினர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர்கள் அந்திஸ்வரன்- ஆனந்த லெட்சுமி தம்பதி. இவர்களது மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த ... மேலும் பார்க்க