செய்திகள் :

'தலைமைச்‌ செயலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது' - வானதி சீனிவாசன் காட்டம்

post image

நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.

தவெக அரசு குறித்து வானதி சீனிவாசன், "இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிற கட்சிகளில் உள்ள நபர்களை எவ்வாறு ராஜினாமா செய்ய வைப்பது என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தூய்மையான ஆட்சியைத் தருவதாகக் கூறிவிட்டு, மறைமுக பேரம் மற்றும் அழுத்தங்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, பெரும்பான்மை பெறுவதற்காக இந்த அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தி வருகிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

மக்களின் தீர்ப்பை ஏற்று கூட்டணியுடன் ஆட்சி நடத்தினாலும், குறுக்கு வழியில் பெரும்பான்மை பெறுவதற்காகப் பண மற்றும் அதிகார பேரங்களில் இக்கட்சி ஈடுபடுகிறது.

இவர்களின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பிற்கும் ஜனநாயகத்திற்கும் உரிய மரியாதை அளிக்கிறதா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, தலைமைச் செயலகம் அரசுப் பணிக்கான இடமாக இல்லாமல் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சரின் தந்தை ஆய்வு செய்வதும், கட்சி நிர்வாகிகள் புதிய பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைப்பதும், மாநகராட்சி கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நபர்கள் தலையிடுவதும் தொடர்கிறது.

அரசு விவகாரங்களில் தகுதியற்ற நபர்கள் தலையிடுவதை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் இரட்டைக் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த இரண்டு மாத கால ஆட்சியில் ஆட்சியாளர்களின் முகம் மாறியுள்ளதே தவிர, பெண்களுக்குப் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேகதாது அணை திட்டம்
மேகதாது அணை திட்டம்

காவல்துறை சீருடை மாற்றத்தைத் தவிர வேறொரு மாற்றமும் நடக்கவில்லை; குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயம் இல்லை என்பதுதான் தினசரி செய்திகள் மூலம் தெரிகிறது.

காவிரி அணை விவகாரத்தில், மத்திய அரசு தமிழகத்தின் அனுமதி இன்றி எதையும் செய்யக்கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, கூட்டணியில் உள்ள அண்டை மாநில முதலமைச்சருடன் பேசி தமிழகத்தின் நீதியையும் உரிமையையும் நிலைநாட்ட வேண்டியது மாநில முதலமைச்சரின் பொறுப்பாகும்" என்று பேசியுள்ளார்.

`திரும்பத் திரும்ப அவகாசமா?’ - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் தரப்பிடம் கடுகடுத்த நீதிபதி

உருட்டுக்கட்டையால் தாக்கிய நிதியமைச்சர் மரியவில்சன்தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ந... மேலும் பார்க்க

தவெகவின் அடுத்த அரசியல் அதிரடி: அதிமுக, திமுக நிர்வாகிகள் இணைப்பு

சில நாள்களாக, அதிமுக சீனியர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், பிற கட்சிகளின் நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது வழக்கமான காட்சிகளாக மாறி வருகிறது.நேற்றும் பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில்... மேலும் பார்க்க

"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்..!" - அமைச்சர்‌ நிர்மல் குமார்

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் நிர்மல் குமார்.அந்தச் சந்திப்பின் போது திமுக, அதிமுக, பாஜக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பேசியதாவது..."தற்போது திமுக, அதிமுக மற்றும் பார... மேலும் பார்க்க

'யார் Boss என்று நெதன்யாகுவுக்கு தெரியும்' - ட்ரம்ப்; ஈரான் போருக்கு பின், விரைவில் சந்திப்பு!

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தான் ஈரான் மீது போரை தொடங்கின. ஆனால், இப்போது அமெரிக்கா 'போர் நிறுத்தம்' என்கிற வெள்ளைக் கொடியோடு நிற்க, இஸ்ரேல் இன்னும் முறுக்கிக் கொண்டே இருக்கிறது.அதாவது, அமெரிக்க... மேலும் பார்க்க

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி - கண்ணீரில் தெஹ்ரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமனியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை துவங்கின.ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த இறுதிப் பயணத்த... மேலும் பார்க்க