செய்திகள் :

தவெக: "இதற்கு பதில் கூறினால் பிரச்னைகள் வரும்!" - செங்கோட்டையன்

post image

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் என இரண்டு பதவிகளை வழங்கியிருக்கிறார்.

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்

இந்நிலையில் இன்று( நவ.28) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திருக்கிறார் செங்கோட்டையன். அப்போது பேசிய அவர், " ஈரோடு சுற்றுப்பயணம் தொடர்பாக விரைவில் விஜய்யுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

மக்கள் மத்தியில் தமிழகத்தைப் புதியவர்கள் ஆள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

இதன் மூலமாக 2026ல் மக்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வார்" என்று கூறியிருக்கிறார். அதிமுகவில் இருந்து இன்னும் சிலர் தவெகவிற்கு வருவார்களா? என்ற கேள்விக்கு, "பதில் கூறினால் பிரச்னைகள் வரும்.

விஜய், செங்கோட்டையன்
விஜய், செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் சில சொந்த பணிகள் இருக்கிறது. மீண்டும் சென்னை வந்த பின் விஜய்யிடம் ஒப்புதல் பெற்று சுற்றுப்பயணம் குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழ்நாடு முன்னேற அயராது உழைப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க