செய்திகள் :

”தவெக-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என நான் கூறவே இல்லை”- கடம்பூர் ராஜூ விளக்கம்!

post image

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எ.ல்ஏ-க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 3 முறை கோவில்பட்டிதொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அ.தி.மு.கவில் இருந்து விலகி தன்னை த.வெ.கவில் இணைத்துக் கொண்டார்.  

இந்த நிலையில் சமீபத்தில்  “யாரும் த.வெ.க-வில் இணைய வேண்டாம். சீனியர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை”  என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

கடம்பூர் ராஜூ

ஆனால், இதனை கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் தெய்வீக ஆசியுடன் கடந்த ஜூன் 6-ம் தேதி, சாதி, மத பணக்கலாச்சாரம் ஆகியற்றை முற்றிலும் ஒழித்து புதிய யுகம் படைத்திட்ட மக்களின் முதல்வர் விஜய்யின் தலைமையில் புதிய பாதை, புதிய பயணம் என்கின்ற வகையில் புதிய பயணத்தை தொடங்கினோம். தமிழக அரசியலில் இனி என்றும் வெற்றிக்கொடி நாட்டுகின்ற ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.

லஞ்சம் லாவண்யம், ஊழலற்ற மக்களாட்சி நடத்துகின்ற மாமனிதர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தாயுள்ளத்தோடு எங்களை அன்போடு அரவணைத்து மக்கள் பணியாற்றும் மாபெரும் வாய்ப்பினை வழங்கியுள்ளார் என்கின்ற பெருமிதத்தோடு எங்கள் பயணம் தொடர்கிறது. இனி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் மட்டும்தான்.

கடம்பூர் ராஜூ

மக்கள் ஏற்றுக்கொள்கின்ற ஒரே இயக்கமாகும். மக்கள் பணி செய்கின்ற அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் நலன் கருதி அனைவரும் இணையப் போகின்ற ஒரே இயக்கமாகும். சில பொய்யுரைகளையும், கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பி உண்மைக்கு தடை போட முடியாது"  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEET: "முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?" - தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்

தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் த... மேலும் பார்க்க

"சி.விஜயபாஸ்கர் - வியக்கிறேன்; வைகோ - பேசுவதற்கு ஒன்றுமில்லை!" - நாஞ்சில் சம்பத் 'நச்'

அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், 'விஜய் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார் வைகோ!' எனப் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். இந்தச் சூழலில், த.வெ.க அரசு மீதான எதி... மேலும் பார்க்க

"இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவித்ததே நீங்கள் தான்" - மோடி vs ராகுல், கார்கே

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்வு வினாத்த... மேலும் பார்க்க

"மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.!"- நீட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்த... மேலும் பார்க்க

"அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது" - ஈரானின் 3 எச்சரிக்கை

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஈரான் எண்ணெய் மீதான கெடுபிடிகளைச் சற்று தளர்த்தியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியிருக்கும் சூழலில், அமெரிக்கா ஈரான் வர்த்தகத்தை இறு... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" - திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அ... மேலும் பார்க்க