செய்திகள் :

தாமரை சின்னத்தில் தமாகா: "என் கட்சியில் சிலருக்கு அதிருப்தி; ஏனென்றால்.."- ஜி.கே.வாசன் சொல்வது என்ன?

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

5 தொகுதிகளிலும் அந்தக் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேசியிருக்கிறார்.

"சைக்கிள் சின்னம் கிடைக்காததால் கூட்டணியில் இருக்கக்கூடிய பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

நான் இந்தக் கட்சியை ஆரம்பித்த பிறகு 4, 5 தேர்தல்களில் போட்டியிட்டேன். முதல் தேர்தலில் தோப்பு சின்னம், இரண்டாவது தேர்தலில் ஆட்டோ சின்னம், மூன்றாவது தேர்தலில் இரட்டை இலை சின்னம், நான்காவது தேர்தலில் நாங்கள் விரும்பும் சைக்கிள் சின்னம் ஆகியவற்றில் போட்டியிட்டிருக்கிறேன்.

சின்னங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் களப்பணி முக்கியம், கூட்டணியின் பலமும் முக்கியம். அதனை உணர்ந்துதான் செயல்படுகிறோம்.

அதிமுக தமிழகத்தின் முதல் கட்சி, பாஜக இந்தியாவின் முதல் கட்சி இந்த இரண்டு கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இருக்கும்போது, டபிள் என்ஜின் சர்கார் என்று கூறப்படும்பொழுது நல்ல அரசை அமைக்கக்கூடிய சின்னமாக நாங்கள் இந்தச் சின்னங்களை கருதுகிறோம்.

அதன் அடிப்படையில்தான் நாங்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

தொடர்ந்து தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் கட்சியில் சிலருக்கு அதிருப்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு, "என்னுடைய கட்சியில் சிலருக்கு அதிருப்தி இருக்கிறது.

அது நியாயமான அதிருப்திதான். ஒருவர் கட்சிப் பணிக்காக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைக்க கூடிய நேரம் தேர்தல்தான்" என்று தெரிவித்திருக்கிறார்.

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ - தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க

திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'திடீர் என்ட்ரி' - ஸ்டாலின் 'டிக்' செய்த பட்டியலில் மாற்றம்?!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இருப்பினும், கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! - திமுக நிர்வாகிகள் ஷாக்!

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இன்றுக்குள் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அல்லது நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் கொங்கு... மேலும் பார்க்க

திருத்தணியில் அரி `டு' குமரியில் தளவாய் சுந்தரம் - இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்வது என்ன?

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் - தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

முந்துவது யார்?தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான் ‘முந்துவது யார்?’மாவட்ட கள நிலவரம்தூத்துக்குடி1. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி:முன்னொரு காலத்தில் ம... மேலும் பார்க்க