பெருங்குடி: பிரமாண்டமாக உருவாகும் காசாகிராண்டு ஸ்கைடெக்! 4.28 ஏக்கரில் பிரீமியம்...
இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்வது என்ன?
ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதனிடையே கோவிட் காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் இந்தியாவில் மீண்டும் விதிக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.
"மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக, நாட்டில் ஊரடங்கு (லாக்டவுன்) பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை.
இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அத்தகைய முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.
இத்தகைய நேரங்களில் நாம் அமைதியாகவும், பொறுப்பாகவும், ஒற்றுமையாகவும் இருப்பது முக்கியம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் வதந்திகளைப் பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தீங்கு விளைவிக்கக் கூடும்.

எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றித் தொடர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், இந்தியாவின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது.
உருவாகும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.












